வால்பாறை, ஏப்.2- கோவை மாவட்டம் வால் பாறையை அடுத்துள்ள அக்காமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவரது மனைவி சந்திரா(54). எஸ்டேட் தொழிலா ளியான இவர் சம்பவத்தன்று தேயிலை தோட்ட பணிக்கு சென்று உணவு இடை வேளையின்போது வனப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இது குறித்து கணவரிடம் சக தொழிலாளிகள் தெரிவித்த னர். பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதை யடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து கிடைக்க வில்லை. 2-வது நாளாக டிரோன் மூலம் தேடினர். அப்போது சின்னகல்லார் எஸ்டேட் வனத்தில் இருந்த அவரை மீட்டனர். வழி தெரியாமல் வனத்திற்குள் சென்று விட்டதாக தெரி வித்தார்.