மதுரையில் வரக்கூடிய 22-ஆம் தேதி முருக பக்தர்கள் பெயரில் கபடத்தனமாக ஒரு அரசியல் மாநாடு நடத்துவதற்கு பாஜக தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மதச்சார்பின்மைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில்; மத வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் பாரதிய ஜனதா கட்சி முருக பக்தர் மாநாடு என்ற போர்வையில் இத்தகைய மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.ஆன்மீகத்தின் மாநாடு பெயரில் நடக்கக்கூடிய இந்த அரசியல் மாநாட்டை புறக்கணிப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் முன்வர வேண்டும். அதிர்ச்சி அளிக்கிறது வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆள் கடத்தல், பணம் பறித்தல், தனது அலுவலகத்துக்கு சொந்தமான வாகனத்தை ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தியது போன்ற சட்டவிரோதமான காரியங்களில் காவல்துறை யின் உயர் அதிகாரி ஈடுபட்டிருப்பது மிக அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரி இப்படி இருந்தால் அவர்கள் கீழே உள்ள காவலர்கள் எப்படி செயல்படுவார்கள் என்று கற்பனை செய்து பார்க்கவே மிகுந்த நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. உடனடியாக இந்தச் சம்ப வத்தில் தமிழக அரசு தலையிட்டு முறையாக ஏடிஜிபி ஜெயராம் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், அவரைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கெங்கும் செங்கொடி!
ஜூன் மாதம் 11ஆம் தேதி துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தில் 18ஆம் தேதி வரை கடந்த 8 நாட்களாக மாநிலம் முழுவதும், எங்கு பார்த்தாலும் நகரமாக இருந்தா லும், கிராமமாக இருந்தாலும் செங்கொடி புதல்வர்களின் எழுச்சிமிகு பிரச்சாரத்தை நான் கண்டு வருகிறேன். மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு இந்த பிரச்சார குழுக்களை வரவேற்கின்றார்கள்.
மக்களின் அங்கீகாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை யென்றால் என்னாகும்! நாட்டில் நல்லது கெட்டது எளிய மக்களின் பிரச்சனையை கேட்பது யாரு நீங்க தானே! அதனால உங்க கட்சியை தெரியாம இருக்குமா! - இப்படித்தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் அளிக்கின்ற பதிலாக இருக்கிறது. மக்களுக்கு ஒரு பாதிப்பு என்று சொன்னால், மக்களுக்கு முக்கிய கோரிக்கைகள் என்று சொன்னால் உடனடியாக களத்திற்கு வந்து போராடக்கூடிய கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பாஜக-அதிமுக கூட்டணியை தோற்கடிப்ப தில் மற்ற எல்லோரைக் காட்டிலும் முதன்மை யான படையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படை தமிழகத்தில் செயல்படும்.
நிறைவு பொதுக்கூட்டம்
இருபதாம் தேதி மாலை நிறைவுப் பிரச்சார பொதுக்கூட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் கலந்துகொள்ளக்கூடிய பொதுக்கூட்டம் சென்னையிலே நடைபெற விருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் கடந்த 10 நாட்களாக மக்கள் எங்க ளிடம் தெரிவித்திருக்கக்கூடிய கோரிக்கைகளை விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதை நாங்கள் தீர்மானிக்க இருக்கின்றோம்.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பிரச்சாரக்கூட்டங்களில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆற்றிய உரைகளில் இருந்து