சென்னை, செப். 12 - தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங் காற்று குழு பரிந்துரை அளித்துள்ளது. காவிரியில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு உரிய பங்குத் தண்ணீரை உடனடியாக திறந்து விடு மாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக அணை களில் போதுமான அளவில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு தெரி வித்து வருகிறது. எனினும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்த ரவை ஏற்று, 5 ஆயிரம் கன அடி விகிதம் தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசு, செப்டம் பர் 12-க்குப் பிறகு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறி விட்டது. இந்நிலையில் தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று கூடிய காவிரி நதிநீர் ஒழுங்கா ற்று குழு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு, அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீ ரின் அளவு உள்ளிட்ட விவ ரங்களை ஆய்வுசெய்த பிறகு, அடுத்த 15 நாட்களு க்கு தமிழ்நாட்டிற்கு தின மும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.