states

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடி-ஓபிஎஸ் தனித் தனியாக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை,பிப்.1- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடக்கிறது. இத்தொகு தியில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பா ளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி யிடுகிறார்.  அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை அவரது கட்சி  ஒதுங்கிக் கொண்டது. பாஜக போட்டி யிட்டால் ஆதரிப்போம் என்றும் இல்லை யென்றால் அதிமுக தரப்பில் எங்கள் அணி போட்டியிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்தது. இதையடுத்து, எடப்பாடி அணியும் களம் இறங்குவதாக அறிவித்தது.  இதற்கிடையில், பாஜகவும் ஆழம் பார்த்தது.  இதனால், அந்த கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில், எடப்பாடி அணி முன்  னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டி யிடுவார் அறிவித்துள்ளது. இவருக்கு வயது  65.  கடந்த 2001 ஆம் ஆண்டு ஈரோடு தொகுதி யிலும், 2016 இல்  ஈரோடு கிழக்கு தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இவரது வீட்டுக்கு வாட்ச்மேன் இல்லையாம்!

“என்னை எளிதில் யாரும் அணுக முடி யும். எனது வீட்டில் காவலுக்காக வாட்ச் மேனோ, நாயோ இல்லை. 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ள முடியும்’’ என்று  கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? ஓ.பி.எஸ் அணி 

ஓ.பி.எஸ். அணியினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ஈரோடு கிழக்கு தொகுதியில் செந்தில் முரு கன் போட்டியிடுகிறார் என்று ஓ.பன்னீர்செல்  வம் அறிவித்தார். பாஜக தரப்பில் வேட்பாளர்  நிறுத்தப்பட்டால், தாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்  தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதி யானது என்றும் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை  ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெ ழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்  னம் கிடைக்கும். எடப்பாடி தரப்பு கையெ ழுத்து கேட்டால் போட்டுத் தர தயாராக இருக்கிறோம். என்னால் சின்னம் முடங்கும் நிலை உருவாகாது.