சென்னை, ஜூன் 6- சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்கு 3 வயதில் மெக்காட்டிக் பேரஸ், ஒரு வயதில் நோயல் கிறிஸ் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன. பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வரு கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவா னிக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பணம் கட்டி விளையாடு வதை பழக்கமாக்கி கொண்டுள்ளார். ரம்மி விளையாட்டில் மூழ்கிய பவானி, அளவுக்கு அதிகமாக பணம் இழந்துள்ளார். ஆனாலும், ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அவரது தங்கை பாரதி, கவிதா இருவரிடமும் ரூ.3 லட்சம் வரைக்கும் கடன் வாங்கி, தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் ஈடுபட்டுள்ளார். அந்த பணத் தையும் மொத்தமாக இழந்துள்ளார். பிறகு, வீட்டில் இருந்த தனது 20 சவரன் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக ரம்மி விளையாட்டில் முழுமையாக இழந்துள் ளார். இப்படி ஆன்லைன் ரம்மி விளை யாட்டு மூலமாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் பவானி பணத்தை பறி கொடுத் துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்ச லில் இருந்த பவானி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் குடும்ப தலைவியான பவானி இளம் வயதிலேயே லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய் திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட பவானி பி.எஸ்.சி. கணிதம் பட்ட படிப்பை முடித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி போன்று மேலும் பல விளையாட்டுகளும் அணி வகுத்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற விளையாட்டுகளில் படித்த இளைஞர்கள் பலரே பணம் கட்டி விளையாடி வருகிறார்கள். தொடக்கத் தில் விளையாட்டாகவே தெரியும்.