திண்டுக்கல்,ஜூலை 26- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் சின்ன வெங்காயம் வரத்து காரணமாக இரண்டு நாளில் பாதிக்கு பாதி விலை குறைந்தது. நூறு ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது நாற்பது ரூபாய்க்கு விற்பனையாகிறது . தமிழ்நாட்டில் சமீபத்தில் சின்ன வெங்காயம் கடுமையாக விலை உயர்ந்தது. வட மாநிலங்களில் கடுமையான மழை காரணமாகவும் ஆந்திரா, கர்நா டகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வர வேண்டிய வெங்காயத்தின் வரத்து நின்றது. இதனால் உள்ளூர் பகுதியில் விளைந்த சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.270 வரை விற்கப்பட்டது இதனால் வியாபாரிகளும் வாடிக்கையாளர் களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது உள்ளூர் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வெங்காயம் விளைந்த தோட்டங்களில் தற்போது அறுவடை நடைபெற்று சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து அதி கரித்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை சரிய தொடங்கி உள்ளது. கடந்த வாரம் ஞாயிறன்று ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது அதிரடியாக இரண்டே நாட்களில் சரிந்து ரூ.40 -க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.