states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில்  ஒருவர் பலி

கொச்சி, நவ.4-  கொச்சியில் கடற்படை  ஹெலிகாப்டர் விபத்துக்குள்  ளானதில் ஒருவர் உயிரிழந் தார். ஒருவர் பலத்தக் காயம்  அடைந்தார்.  சோதனை ஓட்டத்தின் போது கடற்படை விமான  நிலையத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடாவின் ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டது. விபத்  துக்குள்ளானது சேடக் ஹெலிகாப்டராகும். கடற் படையின் பழமையான ஹெலிகாப்டர்களில் சேடக் ஒன்றாகும்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகப்பட்டினம், நவ.4- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் வி. செந்தில்குமார்(38), ஜெ. மதன்(20), வி.சிவக்குமார் (50), எஸ்.நித்தியானந்தம் (16)  இவர்கள் மூவரும்  செந்தில்  குமார் படகில்  கடலுக்கு மீன்  பிடிக்கச் சென்றனர். வேதா ரண்யத்திற்கு கிழக்கே  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சனிக்கிழமை அதி காலை 4.30 மணியளவில் பட கில் வந்த ஒரு கும்பல், இவர்  களைத்தாக்கியதில் மதன்,  செந்தில்குமார் காயமடைந் தனர். பின்னர் அந்த கும்பல்,  மீனவர்களின் படகில் இருந்த மீன், பேட்டரி, ஜிபிஎஸ் கருவி மற்றும் டார்ச் லைட்டுகளை பறித்துக் கொண்டு தப்பி யுள்ளனர்.  இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு   எட்டா வது கொள்ளைச் சம்பவம் இதுவாகும். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் இருந்து கடலுக்குச் சென்ற 40க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில்  கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளனர்.

சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை, நவ.4- தீபாவளி பண்டிகையை யொட்டி குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்வ தாக வரும் மோசடி விளம்ப ரங்களை நம்பி ஏமாற வேண்  டாம். பிரபல கடைகளின் பெய  ரில் லிங்குகளை அனுப்பி குலுக்கல் முறையில் பரிசு  அளிப்பதாக மோசடி நடை பெறலாம். இது போன்ற  லிங்க்குகளை கிளிக் செய் யவோ, மற்றவர்களுக்கு பகி ரவோ வேண்டாம். இதன்  மூலம் ஒருவரின் தனிப்பட்ட  தகவல்கள் திருடப்படலாம் என சைபர் கிரைம் காவல்  துறையினர் எச்சரித்துள்ளனர். 

புதுமணத் தம்பதி கொலை வழக்கு மேலும் இருவர் சரண்

தூத்துக்குடி, நவ.4- தூத்துக்குடியில் புது மணத் தம்பதி மாரிச்செல்  வம் (23), கார்த் திகா (21)  ஆகியோர் திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்தனர். இந்த  சம்பவத்தில் மணமகள்  கார்த்திகாவின் தந்தை  முத்துராமலிங்கம் (47),  இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா (23), மாரியப்பன் மகன்  ராஜபாண்டி(27) மற்றும் ஒரு  இளஞ்சிறார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்  நிலையில் கருப்பசாமி, பரத்  ஆகிய இருவர் வள்ளியூர்  நீதிமன்றத்தில் சரணடைந் துள்ளனர்.

முதல்வருக்கு வைரஸ் காய்ச்சல்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வெள்ளிக்கிழமை முதல் இருமல்  மற்றும் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்ததாகவும், பின்னர் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்  பட்டதாகவும் முதல்வரின் தனிப்பட்ட மருத்துவரான மெட்ராஸ் இஎன்டி ஆரா ய்ச்சி அறக்கட்டளையின் (எம்இஆர்எஃப்) தலைமை அறுவை சிகிச்சை நிபுணரும் இயக்குநருமான மோகன் காமேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமெனவும் தெரி வித்துள்ளார்.

காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ!

மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில், பாஜக முன்னாள் எல்எல்ஏ-வும், பாஜக இளைஞர் அணியின் முன்  னாள் மாவட்டத் தலைவருமான கமலேஷ் சுமன் காங்கிரஸ் கட்சியில் இணைந் துள்ளார். மொரீனா மாவட்டத்தில் உள்ள அம்  பாஹ் சட்டமன்றத் தொகுதியின் முன்  னாள் எம்எல்ஏவான கமலேஷ் சுமனுடன்,  பாஜக யுவ மோர்ச்சாவின் முன்னாள் தலை  வர் நரேஷ் சிங் தோமரும் காங்கிரஸ் கட்சி யில் இணைந்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த முதல்வர் சிவ ராஜ் சிங் சவுகான், மக்கள் பணியில் கவ னம் செலுத்தாததால், அவர் மீது அதிருப்தி அதிகமாக உள்ளது. எனவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து காங்கிரசில் சேர்ந்தோம் என்று இவர்கள் தெரிவித் துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17  அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் தேர்தல்: இலவசங்களை அள்ளி வீசிய பாஜக!

சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர்  7 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின் குஷாபாவ் தாக்ரே பரிசர் பகுதியில், வெள்ளியன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடியின் 2023-ம் ஆண்டு உத்தர வாதம்’ என்ற பெயரில் பாஜக-வின் தேர்  தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அதில், “திருமணமான பெண்களுக்கு  ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் நிதியுதவி  அளிக்கப்படும்; ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு  சிலிண்டர் ரூ. 500-க்கு வழங்கப்படும். கல்  லூரி செல்லும் மாணவ - மாணவியர்க்கு, பயணப்படி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்; அயோத்தியில் ராமர் கோயிலை பார்வை யிட மக்கள் அழைத்துச் செல்லப்படுவர்” என்று தேர்தல் வாக்குறுதிகளாக சலுகை களை அமித்ஷா அள்ளி வீசியுள்ளார்.

அபிராமி ராமநாதன் இல்லத்திலும் ரெய்டு!

சென்னை, நவ.4- வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை (நவ.3) பல்வேறு  இடங்களில் சோதனை மேற்கொண்ட னர். இந்த சோதனை சனிக்கிழமையும் (நவ.4) நீடித்தது. கஸ்தூரி எஸ்டேட் டில் உள்ள பிரபல தொழில் அதிபர்  அபிராமி ராமநாதனின் அலுவலகத்தி லும் சோதனை நடைபெற்றது. மேலும் அவரது வீடு மற்றும் அவர்  தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிராமி ராமநாதனை விசா ரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

தீபாவளிக்கு சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே சிறப்பு ரயில்

சென்னை, நவ.4- தீபாவளிக்கு சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்திலிருந்து நெல்லை க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை யொட்டி ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற் காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை  சென்ட்ரல் - நெல்லை இடையே 3 நாட் கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8, 15 மற்றும் 22 ஆம் தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06051) அடுத்த நாள் காலை 11.45  மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து 9, 16 மற்றும் 23 ஆம் தேதி களில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06052) அடுத்த நாள் அதி காலை 3.45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கவுதமி புகார்:  ஒருவர் கைது

சென்னை,நவ.4- திரைக் கலைஞர் கவுதமி, இரண்டு மாதத்திற்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், தனக்கு சொந்தமான சொத் துக்களை அழகப்பன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து மோசடி  செய்துள்ளனர். ரூ. 10 லட்சம் சொத்துக் களை அவர் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து தன்னையும் தனது மகளையும் மிரட்டி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார். அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறிய கவுதமி, பாஜக கட்சியை  சேர்ந்த தலைவர்கள் சிலர் அழகப்ப னுக்கு துணை நிற்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பிடிப்ப தற்கு காவல்துறை மூன்று தனிப்படை களை அமைத்துள்ளது. இதற்கிடை யில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டை யூர் நில வழக்கில் தொடர்்புடைய நில தரகர் பலராமனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் மீது தாக்குதல் :  பாஜக நிர்வாகி கைது

சென்னை, நவ.4- சென்னையை அடுத்த குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் மாணவர்கள் சிலர்  பேருந்தின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த பாஜக நிர்வாகியும்  நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து படிக்கட்டில் நின்று இருந்த மாணவர்களின் கண்ணத் தில் அடித்து அவர்களை பேருந்தி லிருந்து கீழே இறக்கி விட்டார். மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும்  நடத்துனர் ஆபாசமாக பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பேருந்தின் நடத்துநர் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சனாவை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி மாணவர்களை தாக்கிய  ரஞ்சனா நாச்சியாருக்குப் பெற்றோர் களும், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.