ஏப்ரல் 9-இல் மீண்டும் செல்கிறார்
பெங்களூரு, ஏப். 1 - கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை யொட்டி, ஏப்ரல் 13 துவங்கி ஏப்ரல் 20 வரை வேட்புமனுக்களைத் தாக்கலும் நடைபெறு கிறது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாவ தற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே பாஜக பிரச்சா ரத்தைத் துவங்கி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட் டோர் மாதந்தோறும் கர்நாடகத்திற்கு வருவதும் திட்டங்களைத் துவங்கி வைப்பதுமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023 ஜனவரி 12 துவங்கி மார்ச் 25 வரையிலான 78 நாட்களுக்குள் 7 முறை கர்நா டகத்திற்கு வந்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி யேற்ற, ஓராண்டில் அதிகபட்சமாக சென்ற மாநிலம் என்றால், அது கர்நாடகம்தான் என்று மாறியுள்ளது. 2023-ஆம் ஆண்டில், ஜனவரி 12, ஜனவரி 19, பிப்ரவரி 6, பிப்ரவரி 12, பிப்ரவரி 27, மார்ச் 12, மார்ச் 25 என 7 முறை, பிரதமர் மோடி கர்நா டகத்திற்கு வந்துள்ளார். அடுத்ததாக ஏப்ரல் 9 அன்று மீண்டும் கர்நாடகத்திற்கு வரவுள்ளார். மேலும் பிரதமர் மோடி இந்த பயணத்தை 2022 ஜூன் 20 அன்றே துவக்கி விட்டார். அதன்பிறகும் செப்டம்பர் 2, நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கர்நாடகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்தமாக 2022 ஜூன் துவங்கி மார்ச் 25-க்குள் 9 மாதங்களுக்குள் 10 முறை கர்நாடகத்தைச் சுற்றி வந்துள்ளார். இதற்கு முன்பும், 2018-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோதுதான் இதேபோல அதிகபட்சமான பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டிருந்தார். அந்த ஆண்டு 7 முறை கர்நாடகம் சென்ற மோடி, தேர்தலுக்கு முன்னதாக மட்டும் 6 பயணங்க ளை மேற்கொண்டார்.
இதே பிரதமர் மோடி, 2020 ஜனவரி 2 முதல் 2022 ஜூன் 20 வரை கர்நாடகாவிற்கு மேற்கொண்ட பயணங்கள் என்றால், வெறும் இரண்டுதான். இந்த இரண்டுக்கும் இடையி லான இடைவெளி 29 மாதங்கள். ஆனால், 2023 தேர்தலையொட்டி, ஹுப்பள்ளியில் 26-ஆவது தேசிய இளைஞர் விழா, பஞ்சாரா சமூகத்திற்கான உரிமைப் பத்தி ரங்கள் வழங்கும் விழா, இந்திய எரிசக்தி வாரத்தின் தொடக்க விழா, ‘ஏரோ இந்தியா - 2023’, ஷிமோகா விமான நிலையத் திறப்பு விழா, பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை திறப்பு விழா, ஒயிட்பீல்ட் மெட்ரோ லைன் திறப்பு என நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறேன் என்ற பெயரில் 9 மாதத்திற்குள் 10 முறை கர்நாட கத்திற்கும் வந்துள்ள பிரதமர் மோடி, ஏப்ரல் 9 அன்று 11 வது முறையாகவும் வரவுள்ளார். 2014-இல் பிரதமரான பிறகு நரேந்திர மோடி மொத்தம் 32 முறை கர்நாடகத்திற்கு அதி காரப்பூர்வ அரசுப் பயணங்களை மேற்கொண் டுள்ளார். இதில், தேர்தல் நடைபெற்ற ஆண்டுக ளில் மட்டும் சுமார் 18 முறை வந்து சென்றுள் ளார். இவ்வாறு தேர்தல் நடைபெறும் மாநிலத்தி ற்கு பிரதமர் மோடி அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றம் சாட்டின. குறிப்பாக, பெங்களூரு சர்வ தேச விமான நிலையம் அருகே 59 கோடி ரூபாய் செலவில் கெம்பேகவுடா சிலை நிறுவப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்கு 30 கோடி ரூபாய் செலவானது. மோடி நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்க ரூ. 12 கோடியும், தண்ணீர் செல வாக ரூ. 1 கோடியும் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதை குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பின. எனினும் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும், இப்படித்தான் பாஜக மக்களின் வரிப்பணத்தை எடுத்து சூறையாடி வருகிறது. மக்களின் வரிப்பணத்திலேயே தேர்தல் பிரச்சார செலவுகளை நடத்தி முடித்து விடுகிறது.