states

அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு

பொன்னமராவதி, ஆக.14-  வர்த்தகர் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழா  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார்.  விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று பேசுகை யில், “வணிகர்களை சோதனை செய்ய அமலாக்கத் துறைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. அப்படி மீறி  கொடுத்தால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  போராட்டத்தில் ஈடுபடும். கார்ப்பரேட் நிறுவனங்களால் சில்லரை வியாபாரிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள் ளது. தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சிறு வணிகர்களை பாதுகாப்பதற்கு, சிறப்பு சட்டத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.