states

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி வீடுகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஜூலை 12 - அதிமுக தலைமை நிர்வாகி கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி  பழனிசாமி ஆகியோரின் ஆதர வாளர்கள் திங்களன்று (ஜூலை  11) உச்சகட்டமாக கட்சி அலுவல கத்தில் மோதிக் கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு வந்த போது இந்த மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக்  கொண்டதில் பலர் காயமடைந்த னர். காயம் அடைந்த தங்களது  ஆதரவாளர்களை எடப்பாடி  பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வ மும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மோதல் சம்பவத்தை தொடர்ந்து  அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு கூடுதலாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கிரீன்வேஸ் சாலையிலிருந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லும் வழி யில் 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு கூடுதல்  காவல்பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. வழக்கமாக 15 பேர் அவரது  வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்படுவார்கள். அந்த எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வரக்கூடியவர்கள் வெளி யில் நிறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பெயர் விவரங்கள் கேட்கப்பட்டு பதியப்படுகின்றன.