தூத்துக்குடி,மே 12 மதுரையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தூத்துக்குடி என்.டி.பி.எல் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப் பட்டுள்ளது. தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளில் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழி யர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக மதுரையில் வெள்ளியன்று மண்டல தொழி லாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், என்.டி.பி.எல் அனல்மின் நிலைய திட்டச் செயலாளர் எஸ். அப்பா துரை, என்.டி.பி.எல் அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்ட னர். என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப் படி, போக்குவரத்துப் படி, உணவுப் படி, சலவைப் படி, இரண்டு செட் யூனிபார்ம் அதற் கான தையல் கூலி வழங்கப் படும். மேலும் என்டிபிஎல் தொழி லாளர்களில் இஎஸ்ஐ கவரேஜ் இல்லாதவர்களுக்கு மருத்துவ வசதி தனியார் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்து வழங்கப்படும் .ஆண்டு விடுமுறை வழங்கப்படும் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாதம் ரு. 2329 சம்பளத்தில் உயர்வு ஏற்படும். சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைக்கப்படும். மேற்கண்ட கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.