states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி, மே 10 - தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதனன்று காலை ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவிய காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்த மான் கடல்பகுதியில் மோக்கா புயலாக புதனன்று வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வியாழன் வரை வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன்பிறகு வடக்கு -வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம்-மியான்மர் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்  ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதனன்று காலை ஏற்றப்பட்டது.

குமரி சுற்றுலா படகில் பாதுகாப்பு
பூம்புகார் கப்பல் கழகம் நடவடிக்கை

நாகர்கோவில், மே 10- கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்ப னங்காடி பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த  படகு விபத்தின் எதிரொலியாக சுற்றுலாத்தல மான கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகில் பய ணிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இறங்கி உள்ளது. ஒரு படகில் சுமார் 150 பேர் பயணிக்கும் வசதி  உள்ளது. சுற்றுலா படகில் செல்லும் அனை வருக்கும் லைப் ஜாக்கெட் (உயிர் காப்பு மிதவை) கொடுக்கப்பட்டு அதை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்ற பிறகு தான்  அதை அகற்ற வேண்டும். படகில் பய ணிக்கும் போது சுற்றுலா பயணிகள் புகைப் படம் எடுக்க எழுந்து நிற்க வேண்டாம் என,  சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல்  போக்குவரத்து கழக ஊழியர்கள் அறி வுறுத்தி வருகின்றனர். ஒரு படகில் 150 பேர்  மட்டுமே பயணிக்கும் பொருட்டு அதிக சுற்று லாப் பயணிகள் ஏறாதவாறு கண்காணிப்பு பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.

வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடித்திட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை

மதுரை, மே 10-  தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சி ஸின் கொலை வழக்கு விசாரணையை ஸ்ரீவை குண்டம் நீதித்துறை  நீதிபதி 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி  புதுக்கோட்டை யைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன்  என்ப வர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்  சத்தை பெற்றுக் கொண்டு, மணல் கடத்தல்  காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.  இந்த சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வா ளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளி வராது. ஆகவே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை தொடர்பான வழக்கு  விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தர விட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு உகந்ததா? என்பதற்காக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி  அமர்வு முன்பாக புதனன்று  விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில்,வழக்கு விசாரணை முறை யாக சென்று கொண்டிருக்கிறது என தெரி விக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், “தென் மண்டல  காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கண்கா ணிப்பின் கீழ்,  துணை காவல் கண்காணிப்பா ளர்  விசாரணை அதிகாரியாக சுரேஷ் நியமிக்  கப்பட்டுள்ளார். குற்றவாளிகள்  மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. வழக்கு விசார ணையின்  அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 4 வாரத்தில் குற்றப்பத்திரி கையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை  நீதிபதி 2 மாதங்களில் விசாரித்து  முடிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தர விட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அண்ணாமலை மீது மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

சென்னை, மே 10- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவை சேர்ந்தவர்களின் சொத்துப் பட்டியலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற  பெயரில் பாஜக தலைவர் அண்ணா மலை வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில், அரசு வழக்கறிஞர் தேவ ராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதனன்று (மே 10) வழக்கு தொடர்ந்தார். அதில், சொத்துப் பட்டியல் என்ற பெயரில் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அவ தூறு தகவல்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை 8 வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதலமைச்சரை சந்தித்தார்  டி.ஆர்.பி.ராஜா

சென்னை, மே 10- மாநில அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். தமிழ்நாடு அமைச்சரவையில்  பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனான   டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக இணைக்கப்பட்டுள்ளார். அவர், வியா ழனன்று (மே 11) காலை 10.30 மணிக்கு  கிண்டி ராஜ்பவனில் அமைச்சராக பதவி ஏற்கிறார்.  இந்த நிலையில், முதலமைச்சரை புதனன்று (மே10)  சந்தித்து வாழ்த்து பெற்றார். 

உழவர் சந்தைகளில்  தொன்மைசார் உணவகங்கள்

சென்னை, மே 10- தமிழ்நாட்டில் 25 உழவர் சந்தை களில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதற்கட்டமாக, கோவை, திண்டுக் கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ண கிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி, வேலூர், சேலம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டி கள், மூலிகை சூப் வகைகள் போன்ற  உணவுகளை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சிறுதானிய உணவுகள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற உணவுகளை மட்டுமே விற்பனைக்கு வைக்க வேண்டும், உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விற்பனை செய்யலாம், உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இயற்கைக்கு எதிரான நெகிழிப்பை, பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத் தக்கூடாது என்றும் அதில் கூறப்பட் டுள்ளது.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிதாக 200 கார்

சென்னை, மே 10- ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்க ளுக்கு 200 புதிய கார்களை முதல மைச்சர் வழங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவா ரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி,  நாமக்கல், கன்னியாகுமரி, திருச்சி  ஆகிய மாவட்டங்களில் 30 கோடியே  72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாக கட்டிடம் ஆகியவற்றை புதனன்று (மே 10) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ஊராட்சி ஒன்றியக் குழுத்  தலைவர்கள், தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு முதல் கட்டமாக 25 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும்  அடையாளமாக 12 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

சற்குண சத்திய வித்யாலயா  பிளஸ் டூ தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி

சென்னை, மே 10- சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் மற்றும்  பீடித்தொழிலாளர்களின் குழந்தை கள் மேம்பாட்டிற்காக தென்காசி மாவட்டம், மாதாப்பட்டணத்தில் தொடங்கப்பட்ட சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி ஜெயந்தி 575/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். மாணவி ரஞ்சனா 563 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவி இசக்கிகனி 560 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ள னர்.  இந்தப் பள்ளியில், வரலாறு பாடத்தில்  நான்கு மாணவர்களும்,  தாவரவியல் பாடத்தில் இரண்டு மாணவர்களும், இயற்பியல், கணினி அறிவியல் பாடங்களில் தலா  ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப் பெண் பெற்று சாதனை படைத்துள்ள னர். மேலும், 71 மாணவர்கள் 600க்கு  500 மதிப்பெண்களுக்கு மேல்  பெற்றுள்ளனர். சற்குண சத்திய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சி. எஸ். ரெக்ஸ் சற்குணம், பள்ளியின் நிர்வாக அதிகாரி அருட் தந்தை மைக்கேல், பள்ளி தலைமை  ஆசிரியர் அமிர்த சிபியா ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவலை தெரிவித்தனர்.

அரசு கல்லூரிகளுக்கு  2 நாளில் 52,000 பேர் விண்ணப்பம்

சென்னை, மே 10- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக இரண்டே நாளில் 52,000 மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு  வெளியானதை தொடர்ந்து மருத்து வம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் தவிர கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் நாட்டில் அரசு, உதவிபெறும் மற்றும்  தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 1593 உள்ளன. அரசு கலைக்கல்லூரிகள் மட்டும் 164 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் கடந்த 8 ஆம்  தேதி முதல் மாணவர் சேர்க்கைக் கான பதிவு தொடங்கியது. தொடங் கிய முதல் நாளில் மட்டுமே 10 ஆயிரம்  பேர் விண்ணப்பித்தனர். இரண்டா வது நாள் வரை 52 ஆயிரம் மாண வர்கள் விண்ணப்பித்திருப்பதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க 19 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வருகிற 25 ஆம் தேதி மதிப் பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப் படையில் கட் ஆப் தயாரிக்கப்பட்டு  பட்டியல் வெளியிடப்படும். 25 ஆம்  தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் இந்த ஆண்டும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு போட்டித் தேர்வுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி

சென்னை, மே 10- நான் முதல்வன் திட்டத் தின் கீழ் ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசின் ஒருங் கிணைந்த பயிற்சியில் சேர  20-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மாபெரும் திறன் மேம் பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ‘போட்டித் தேர்வு’ பிரிவு கடந்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசுப் போட்டிகளை எளி தாக அணுகுவதற்கு ஏது வான சிறந்த திறன் பயிற்சி  வழங்குவதையே முதன் மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப் பட்டது.  இத்திட்டத்தின் முதற் கட்டமாக ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப் படவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட் டத்திற்கு தலா 150  மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறைப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும். மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செல வினங்களை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியின் அங்கமாக 300 மணிநேர தனி வழி காட்டல், 100-க்கும் மேற் பட்ட மாதிரித் தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இத்திட் டத்திற்கான வல்லுநர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக் கப்படுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள் ளது.

ஸ்பெயின் :  எகிறும் விலைவாசி

மாட்ரிட், மே 10- ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் மூழ்கியுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், வறட்சியின் காரணமாகக் கூடுதல் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அந்நாட்டு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், துறை நிபுணர்களில் ஒருவருமான ஜாமி பெர்னிஸ், “தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக உள்நாட்டு விளைபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய நேரிடும். இதனால் நுகர்வோர் விலை அதிகமாகக் கொடுக்கும் கட்டாயம் உருவாகும். விலைகள் மேலும் உயரவும் செய்யலாம்” என்றார். ஏப்ரல் 2023இல் ஸ்பெயினில் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு, பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்திருக்கிறது. ஆனால், உணவின் விலை எகிறியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் 16 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளிவிபரங்கள் ஸ்பெயினின் தேசிய புள்ளியியல் மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் இருக்கின்றன. தற்போது கடுமையான வறட்சி, குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் நிலவுகிறது. இது தொடர்ந்தால் பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துவது மட்டுமின்றி ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என்பதோடு, ஏற்கனவே உரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகள் 45 விழுக்காடு அதிகரித்துவிட்டதையும் பெர்னிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவர் கொலை குறித்து அறிக்கை: டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வியாழனன்று (மே 11) அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில காவல்துறை தலைவருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. வியாழ னன்று காலை 10 மணிக்கு ஆன்லை னில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கள் தேவன் ராமச்சந்திரன், கவுசர் எடப்பாடி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மருத்துவர் வந்தனாவை  தாக்கிய காட்சியின் சிசிடிவி காட்சிகள் பாது காக்கப்பட வேண்டும். இதை மருத்துவ மனை கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் மாஜிஸ்திரேட் தாலுகா மருத்துவமனைக்குச் சென்று சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து வியாழன் காலை அறிக்கை அளிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட வர்களை மருத்துவர்களிடம் கொண்டு வரும்போது என்ன பாதுகாப்பு ஏற்பாடு களை பின்பற்ற வேண்டும் என்பது  குறித்து நாளை அறிக்கை சமர்ப்பிக்கு மாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.