states

முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தியும் முன்னேற்றமில்லை

உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க உத்தரப் பிரதேசம் சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டிருந்த நேரத்தில் 60 ஆயிரத்து 224 காவல்துறை காவலர் பதவிகளுக்கு அந்த மாநிலத்தின் சுமார் ஐந்து மில்லியன் (50 லட்சம்)போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். ஒரு மாநிலத்தின் இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலையின்மையின் தீவிரத்திற்கு இதைவிடச் சான்று வேறு என்ன வேண்டும்?

முகத்தில் அறையும் வேலையின்மை!

வேலையின்மையின் வளர்ச்சி என்கிற யதார்த்தம் நம் முகத்தில் அறைகிறது. பொருளா தார வளர்ச்சி இருந்தபோதிலும் வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்படவில்லை. படித்த இளை ஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரும் கவலையாக உருவெடுத்து நிற்கிறது. அதிக பாதுகாப்பு தருவதால் அவர்கள் அரசாங்கப் பணிகளில் சேரும் வாய்ப்பிற்காக காத்து நிற்கின்ற னர். காலவரையற்றும் அவர்களால் காத்திருக்க முடியாது. தகுதிகள் அதிகம் இருந்த போதிலும் அவர்கள் கீழ் நிலையில் உள்ள பணிகளுக்கு தற்பொழுது போட்டியிடுகின்றனர்.

இருண்ட நிலைமைதான்!

இந்த முடிவில்லா காத்திருப்பு வன்முறையில் வெடிக்கிறது. உதாரணம்: ராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னி பாத்’ திட்டம். பதவி நியமன முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற காரணத்தால் பீகாரில் கலவரம் வெடித்தது. வெறும் 35 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமார் ஒரு கோடி பேர் போட்டியிட்டனர். பிற மாநிலங்களும் இதே போன்ற இரண்டு நிலைமைதான் நீடிக்கிறது. புள்ளிவிவரங்கள் கூறும் உண்மைகள்! நகர்புற இந்தியாவில் 15- 29 வயதுக்கு இடைப் பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 16.5 சதவிகிதமாக உள்ளது. இது சராசரி விகிதம் 6.5 என்பதைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம் என்று மத்திய புள்ளி இயல் துறையின் தேசிய  முன்மாதிரி ஆய்வு அலுவலகம் (The National Sample Survey Office - NSSO) தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை யிலான மூன்று மாதகாலத்திற்கான  இந்த புள்ளி விவரம் வெளிவந்துள்ளது. வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவது நாட்டின் கட்டமைப்பு களில் கடும் அழுத்தத்தை அதிகரிக்கிறது. 2014 மற்றும் 2019-இல் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளவர்களில் பெரும் பான்மையானோர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் ஆவர். உத்தரப்பிரதேசம் போன்ற ஏழ்மையான மாநி லங்கள், அதிகரித்து வரும் ‘இளைஞர்களுக்கான வேலையின்மை’ சவாலை எதிர்கொள்ள வேண்டும். ஆண்கள், பெண்கள் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை வாய்ப்புகளுக்கு ஏங்கி நிற்கின்றனர். உண்மையில் காவல்துறை காவலர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என்பது குறிப்பிட தகுந்தது.

வேலைவாய்ப்புகள் எங்கே?

அரசாங்க வேலைகள் உண்மையில் குறைந்து வருகின்றன. 2015 முதல் 2022 வரை மத்திய அர சுப் பணிகளுக்கு, சராசரியாக 27.5 மில்லியன் விண்ணப்பதாரர்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர் என பணியாளர்கள் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கான அமைச்சர் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலீடுகள் தேவை. அதற்காக தனி யார் நிறுவனங்களை எதிர்நோக்கி நிற்கும் நிலை தான் உள்ளது. வளர்ச்சி அதிகரித்தாலும் வேலை யின்மை தீவிரமடைந்து வருகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி தனியார் நிறுவனங்களை வேலைவாய்ப்பு உருவாக்க ஊக்கப்படுத்திய போதும் வேலையின்மையை தீர்ப்பதில் முன்னேற்றம் இல்லை.

முரண்பாடு நிறைந்த சூழல் 

ஒருபுறம் தொழிலாளர்கள் உபரியாக உள்ள னர். மறுபுறத்தில் திறன்மிகு தொழிலாளர்களுக் காக பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய முரண் பாடான சூழல் நாட்டில் நிலவுகிறது. தொழிலா ளர் நெகிழ்வு சந்தை நிலைமைகள் உருவாக்கப் பட்டும் இந்த நிலைமை தொடர்வது கவலை அளிக் கிறது. இந்தியாவின் நகர்ப்புறங்களில் அரசு வேலை கள் என்ற மாயைக்காக மில்லியன் கணக்கான இளைஞர்கள் முடிவற்று காத்திருக்கின்றனர். இவர்களை உற்பத்தி மற்றும் சேவைத் துறை களில் ஈடுபடுத்த வேண்டும். துரதிஷ்டவசமாக, இளைஞர்களின் வேலை யின்மையை “சர்வாதிகாரப் பாணியில்” கட்டளை களை இடுவதாலோ தேர்தல்கள் (சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம்) காலத்தில் அரசாங்க வேலைகளில் நிரப்புவதை கட்டாயமாக்குவதன் மூலமாகவோ தீர்த்துவிட முடியாது.

 ‘தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம்
தமிழில்: கடலூர் சுகுமாரன்