states

img

அதிபர் ஆட்சி முறைக்காக மோடி அரசின் சதித்திட்டம்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

சென்னை,செப்.3- சர்வாதிகார அதிபர் ஆட்சி முறையை கொண்டுவருவதற்காக ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டம் தான் ஒரே நாடு - ஒரே தேர்தல் ஏற்பாடு என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந.மனோ கரன் இல்லத் திருமண விழா  முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  யார் பிரதமராக வரவேண்டும்? யார் ஆட்சிக்கு வரவேண்டும்? என்ப தல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம்முடைய லட்சியமாக - நோக்கமாக இருக்க வேண்டும். எனவே இந்தியா என்று சொன்னாலே இன்றைக்கு நிறைய பேருக்கு பயம் ஆகிவிட்டது. அதிலும் பாஜகவுக்கு அச்சமே ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்ற  பெயரைச் சொல்வதற்கே கூச்சப் படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள். இதனால் இன்றைக்கு பாஜக  என்ன செய்திருக்கிறது என்று சொன்னால், திடீரென்று நாடாளு மன்றத்தைக் கூட்டப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்‘ என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக் கின்றன.

மரபை கொச்சைப்படுத்திய மோடி அரசு

அந்த ஒரே நாடு - ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத் திருக்கிறார்கள். அந்தக் குழுவுக்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்று சொல்கிறோம் அல்லவா, அந்த ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவரைத் தலைவராக போட்டி ருக்கிறார்கள். இந்திய நாட்டின்  ஜனாதிபதி என்பவர்  பொது வானவர். அவர் பதவியில் இருந்து  விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனை யிலும் தலையிடுவது அவருக்கு நியாயம் கிடையாது. அதுதான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறிவிடுகிறார். ஆனால் அதை எல்லாம் இன்றைக்குக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற் காக அவரைப் போட்டு, அதற்குப் பிறகு அதில் சில உறுப்பினர்களைப் போட்டிருக்கிறார்கள். அந்த உறுப்பினர்களிலாவது எல்லா கட்சி யும் கலந்து, கேட்டுபோட்டார்களா என்றால், அதுவும் கிடையாது. திமுக இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. திமுகவின் பிரதிநிதிகள் இருக்கிறார் களா என்றால் கிடையாது. எனவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பேரை போட்டு, அவர்கள் நினைத்த தைச் சாதிக்க வேண்டும் என்பதற் காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித் திட்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதிமுக பலிகடா  ஆகப் போகிறது

அதை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி அதிமுக, - ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்தக் கொள்கையை எதிர்த்தார் கள். இப்போது எதிர்க்கட்சியாக இருக் கிறபோது, திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறபோது, அதே அதிமுக அதை ஆதரிக்கிறது. அதிமுக பலி கடா ஆகப்போகிறது. இந்த சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ஒன் மேன் ஷோ (‘One Man Show’) ஆகி விடும். ஒரே நாடு - ஒரே தலைவர், ‘அதிபர்’ என்று அவரே அறிவித்து விடலாம். எனவே தேர்தலே கிடை யாது. ஒரே நேரத்தில் ஒரே தேர்தல்தான் வைக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 2021-இல் த மிழக சட்டமன்றத் தேர்தல் நடை பெற்றது. தேர்தல் நடந்து, நாம் ஆட்சி க்கு வந்து இரண்டரை வருடம் ஆகிறது. இன்னும் இரண்டரை வரு டம் இருக்கிறது. எனவே நாடாளு மன்றத் தேர்தல் வருகிறபோது, ஒரே  தேர்தல் நடத்த வேண்டும் என்றால்  இந்த ஆட்சியைக் கலைத்து விடு வீர்களா? நாம் மட்டுமா, பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம். அதே போல மேற்குவங்கம். அங்கெல் லாம் கலைத்துவிடுவீர்களா? அவர் களுக்கெல்லாம் இன்னும் இரண் டரை வருடத்துக்கு மேல் ஆட்சி  இருக்கிறது. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக மாநி லம். அங்கு 40 சதவீதம் ஊழல் என்ற  ஒரு சிறப்புப் பெயர் எடுத்து, பாஜக,  படுதோல்வி அடைந்து, அங்கு காங்கி ரஸ் தலைமையில் ஆட்சி அமைந் திருக்கிறது. எனவே அந்த ஆட்சி யைக் கலைத்து விடுவீர்களா?

இந்தியாவை காப்பாற்ற தயாராக இருங்கள்

நாடாளுமன்றத்தோடு சட்டமன்ற ங்களுக்கும் தேர்தல் வைத்து, எங்கா வது ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி வராமல் போய்விட்டது என்றால், ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? மறு படியும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை அந்தத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப் போகிறீர்களா? எனவே இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, ஒரு அதிபராகத் தான்  இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்களே தவிர நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.  சிஏஜி அறிக்கை என்ன கொடுத்திருக்கிறது? ரூ. 7.5 லட்சம்  கோடி. நெடுஞ்சாலை போட்டதில், அதே நேரத்தில் டோல்கேட் வசூலில் - இப்படி பல நிலைகளில் கோடி கோடி யாகக் கொள்ளை அடித்து, அதுவும் ஆதாரங்களோடு சிஏஜி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், இப்படிப்பட்ட இந்த கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியும், சபதமும் – ‘இந்தி யாவைக் காப்பாற்ற நாம் இன்றை க்குத் தயாராக இருக்க வேண்டும்‘ என்று இந்த நேரத்தில் உங்களை எல்லாம்  கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.