states

இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

சென்னை, மே 3- சமீபத்தில் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் இருந்து  விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். விக்னேஷின் உடலை உறவினர்களைக் கூட  பார்க்க விடாமல், மயானத் திற்கு கொண்டு செல்லப் பட்டு அடக்கம் செய்யப் பட்டது. அதேபோல் திருவண் ணாமலை மாவட்டத்தில் விசாரணைக்காக அழைத் துச் செல்லப்பட்ட தங்கமணி என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் கைதிகளிடம் இரவு விசாரணைக் கூடாது  என அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பித்து தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கைதான வர்களை மாலைக்குள் சிறை யில் அடைக்க வேண்டும்  என்றும் அறிவுறுத்தி யுள்ளார்.