திருவனந்தபுரம், ஜுன் 9- சில மாதங்களுக்கு முன்பு, சொப்னா சுரேஷ், கேரள முதல்வருடன் தனக்கு இருந்த அறிமுகம் மிகவும் அதிகாரப்பூர்வமானது என்று கூறினார். இதுகுறித்து 2022 பிப்ரவரி 5 அன்று மனோரமா செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கேள்வி: முதலமைச்சருடன் உங்களுக்கு எப்படிப் பழக்கம்? சொப்னா: முற்றிலும் அதிகாரப்பூர்வமானது. கேள்வி: சிவசங்கர் மூலமாகவா? சொப்னா: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சிவசங்கர் சார் மூலமாகவே சந்தித்தேன். கிளிஃப் ஹவுஸ் மற்றும் தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு மிகவும் அதிகாரப்பூர்வமாக இருந்தது. கேள்வி: அவருடைய குடும்பத்தையும் உங்களுக்குத் தெரியுமா? சொப்னா: குடும்பத்தில் எனக்கு அதிக அனுபவம் இல்லை. குடும்பத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்பும் இல்லை. அந்த ரூலர் (அமீரக அதிகாரி) வருகையின் போது தான் கமலா மேடத்தை சந்திக்க நேர்ந்தது. அதைத் தவிர எனக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கேள்வி: முதல்வரின் மகளது திருமணத்திற்கு சென்றதாக முக்கிய குற்றச்சாட்டு உள்ளதே? சொப்னா: தவறான தகவல் கேள்வி: மகளுடன் (முதல்வரின்) உங்களுக்கு அறிமுகம் இல்லையா? சொப்னா: தவறான தகவல் கேள்வி: அமைச்சராக இருந்த கே.டி.ஜலீல் உடனான உங்கள் உறவு எப்படி இருந்தது? சொப்னா: அதிகாரப்பூர்வமானது. ஆதாரம் இல்லை என எழுதிய மனோரமா ‘வெளிநாட்டு கரன்சி கடத்தலில் முதல்வர் மற்றும் முன்னாள் சபாநாயகருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று தலைப்பில், மலையாள மனோரமா 2021 ஆகஸ்ட் 4 அன்று செய்தி வெளியிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதை தவிர வேறு ஆதாரம் ஏதும் இல்லை என சுங்கத்துறையின் கடத்தல் தடுப்பு பிரிவின் அறிக்கையில் உள்ளதாக செய்தியாளர் பெயருடன் வெளியான சிறப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.