திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - கேரள மாநிலம் விழிஞ்சம் கடற் பகுதியில் கடந்த ஆண்டு சட்ட விரோத மாக கடத்தி வரப்பட்ட 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 300 கிலோ ஹெராயின் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்த னர். கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து சுரேஷ், சௌந்தர்ராஜன் ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த மாதம் என்ஐஏ நடத்திய சோதனையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான சற்குணம்(எ)சபேசன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் புதனன்று அதிகாலை என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கு களில் கைது செய்யப்பட்ட இலங்கை யைச் சேர்ந்த 67 பேர் உள்பட கனடா, இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்பு முகாமில் அதிகாலை முதல் சென்னை, கொச்சி போன்ற இடங்களில் இருந்து வந்த ஐ.ஜி, டிஐஜி மற்றும் எஸ்.பி. அடங்கிய குழுவினர் எஸ்.பி.தர்மராஜ் தலைமையிலான என்ஐஏ (தேசிய பாது காப்பு முகமை) அதிகாரிகள் சோத னை நடத்தினர். துணை ராணுவத்தினர் பாதுகாப்பு டன் இந்த சோதனை 3 மணிநேரத் திற்கும் மேலாக நடைபெற்றது. தீவிர வாதிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகளின் முக்கிய தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றதாக கூறப்படு கிறது. இதேபோன்று திருச்சி பொன் மலை மலைஅடிவாரத்தில் உள்ள விக் னேஷ் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணாளன் மற்றும் வேறு கைதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் சோதனை நடந்ததாக வும் தெரிவிக்கப்பட்டது. (ந.நி.)