states

அரசு மருத்துவர் ஊதிய உயர்வுக்கு புதிய அரசாணை: அமைச்சர்

சென்னை, மே 19- அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்  நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி  மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “100  ஆண்டு பழமையான சைதாப் பேட்டை அரசு மருத்துவமனையை 200 படுக்கைகளுடன் 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்து வமனையாகவும், ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தை கள் நல சிகிச்சை பிரிவு என்ற  சீமாங் கட்டிடமும் அமைக்கப்படும்”  என்றார். சத்யசீலன் என்ற போலி மருத்து வர், தஞ்சையிலும், எழும்பூரிலும் மருத்துவப் படிப்பை முடித்த மற்றொரு சத்யசீலன் என்ற மருத்துவரின் சான்றிதழை வைத்து,  புகைப்படத்தை மட்டும் மாற்றி  போலி சான்றிதழ்களை கொண்டு  ஐந்து வருடங்களாக மருத்துவ மனையை நடத்தி வந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம்  தான் ஆகிறது. தகவல் தெரிந்த வுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அதிமுக ஆட்சியில் 4 ஆண்டு கள் போலி சான்றிதழ் மூலம் மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து  அரசாணை 354, மற்றும் அர சாணை 293 என 2 அரசாணைகள் உள்ளன. இந்த இரண்டு அரசா ணைகளையும் சேர்த்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய  அரசாணை உருவாக்கும் பணி நடை பெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.