சென்னை, ஏப். 19 - சட்டப்பேரவையில் தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு 2007ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி புதிய விமான நிலையம் அமைக்கவும் விரிவாக்கம் செய்யவும் நிலங்களை கையகப்படுத்தி அதை இலவசமாகவும் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் தமிழ்நாடு அரசால் விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக் கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு 64.5 ஏக்கர் பட்டா நிலம் கையக செய்யவும் 11.58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை நில உரிமை மாற்றம் செய்யவும் சென்னை விமான நிலைய ஆணையம் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் தொழில்துறையில் வளர்ச்சி அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா தனிமனித வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓசூர் பகுதியில் ஒரு புதிய விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதி தொழிற்சாலைகளுக்கான மையமாக இருப்பதால் வசூலில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு இந்த பகுதியில் சுற்றி உள்ள விமானப் போக்குவரத்து மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் சந்தைத் தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாத்தியக்கூறு உள்ள இடங்கள் ஆய்வு செய்யுமாறு டிட்கோ நிறுவனத்திற்கு அரசு பணித்துள்ளது அரசின் அறிவுறுத்தலின்படி இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு ஒரு ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் டிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றார்.