புதுதில்லி, ஜூன் 23- தேச விரோத, இளைஞர் விரோத அக்னி பாதை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா ஜூன் 24 அன்று நடத்தவுள்ள தேசம் தழுவிய இயக்கத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான துறைவாரி சங்கங்க ளின் கூட்டு மேடை ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட் மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சங்கங்களின் கூட்டு மேடை விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் ராணுவத்திலும்கூட எவ்விதமான ஓய்வூதியம், மருத்துவப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் எதுவும் இல்லாமலும், ஓய்வு பெற்றபின் எவ்வித வேலையும் அளிப்பதற்கான உத்தரவாதமும் இல்லாமலும், மிகவும் மோசடியான விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பிற்போக்குத்தனமான அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக நாடு தழு விய அளவில் தன்னெழுச்சியாக இளைஞர் களும், இதர பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந் துள்ளதை மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி சங்கங்களின் கூட்டு மேடை ஆதரிக்கி றது. இது உறுதியான மற்றும் உத்தரவாதமான வேலைவாய்ப்பு என்ற எண்ணத்துடன் ராணு வத்தில் சேர்வதற்காகத் தேர்வுகளுக்கு ஆஜ ராகிவந்த இளைஞர்களை அஸ்தமிக்கச் செய்தி ருக்கிறது. இத்தகைய மோசடியான சூழ்ச்சித் திட்டம் நாட்டின் ராணுவத்தின் தரத்தைக் கடுமை யாகப் பாதித்திடும், நாட்டின் பாதுகாப்பிற்குப் பேரழிவினை ஏற்படுத்திடும். நம் ராணுவத்தி னரின் மன உறுதியையும், மனவலிமையை யும்கூட மந்தமாக்கிடும்.
முன்னாள் ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், இது ராணுவக் கட்ட மைப்பை உள்ளும் புறமும் ஒரு பக்கத்தில் பலவீனமாக்கிவிடும் அதே சமயத்தில், அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேர்ந்து பின் எவ்வித சமூகப் பாதுகாப்பும், ஓய்வூதியப் பயனும், வேலையுமின்றி வீதியில் வீசப்படும் ராணுவ வீரர்கள் மறுபக்கத்தில் சமூகத்திற்கும் ஆபத் தானவர்களாக மாறுவார்கள் என்றும் எச்சரித்தி ருக்கிறார்கள். கடந்த எட்டாண்டுகளாகக் கடைப்பிடிக் கப்பட்டுவரும் ஒன்றிய அரசின் கொள்கைகள் சாமானிய மக்களைக் கடும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளன. விளைவு, பணக்காரர்களுக் கும் ஏழைகளுக்கும் இடையே மிகவும் விரிவான அளவில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது, விலைவாசிகள் தாங்கமுடியாத அளவிற்கு உயர்ந்திருக்கின்றன, வேலையின்மை எப்போதுமில்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றுள்ளது. அரசாங்கமே சந்தேகிப்பவர் களுக்கு எதிராக புல்டோசர்களைப் பயன்படுத்தி அப்பட்டமான முறையில் சட்டவிரோத நட வடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
அக்னி பாதை எனும் பேரழிவு
அக்னி பாதை திட்டம் என்பது தேசத்தில் நாச கரமான விளைவுகளுடன் நிச்சயமற்ற எதிர் காலத்தைக் கொண்டுவருவதற்கான மற்று மொரு பேரழிவு நடவடிக்கையாகும். தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நாட்டின் எல்லை களைப் பாதுகாத்து வந்த ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒழித்துக் கட்டியுள்ள அதே சமயத்தில், பாஜக தன்னைத் தீவிரத் தேசபக்தியாளராகவும் காட்டிக்கொள் வது கடைந்தெடுத்த பொய் என்பதையே காட்டு கிறது. இதற்கெதிராகப் போராடும் இளைஞர் களுக்கு சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் ஆத ரவு அளித்து வருகின்றனர். இப்போது சம்யுக்த கிசான் மோர்ச்சா ஜூன் 24 அன்று தேசிய அளவில் எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு அறை கூவல் விடுத்திருக்கிறது. இந்த அறை கூவலுக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஆதரவு அளிக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் போராட்ட நடவடிக்கைகளில் தங்களின் அமைப்புகளின் கீழ் உள்ள அனைத்துக் கிளைகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)