சென்னை,ஜூன் 15- நரிக்குடி ஒன்றியத் தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று பதவி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றிய தலைவராக இருந்தவர் பஞ்சவர்ணம். நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அதிமுக உறுப்பினர்களும், 6 திமுக உறுப்பினர்களும், அமமுக, சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர். இதில் 4 அதிமுக கவுன்சிலர்கள், 6 திமுக கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நரிக்குடி ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடத்துமாறு உத்தர விட்டார். அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் பஞ்சவர் ணத்துக்கு எதிராக 12 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து கையெழுத்திட்டனர். இந்த தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சவர்ணத் திடமும் ஆட்சியர் அறிக்கை பெற்றார். அதனை தொடர்ந்து, நம்பிக்கை இல்லாத தீர்மான அறிக்கையை தமிழ் நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார். அதனை பரிசீலித்த ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு பஞ்சா யத்து சட்டம்-212 பிரிவின்படி நரிக்குடி ஒன்றிய தலைவர் பஞ்ச வர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.