states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘என் காளி இந்துத்துவத்தைத் தகர்க்கிறாள்!’-லீனா

‘காளி’ ஆவணப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்று பாஜக-வினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநில காவல்துறையினரும் லீனா மணிமேகலைக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதனிடையே “இந்துத்துவா இந்தியாவாக முடியாது; காளியை அழிக்க முடியாது; காளி மரணத்தின் தெய்வம்” என்று காட்டமாக கூறிய லீனா மணிமேகலை, டுவிட்டரில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் காளி வினோதமானவள். அவள் சுதந்திரமான ஆன்மா. அவள் ஆணாதிக்கத்தை கடுமையாக எதிர்க்கிறாள். அவள் இந்துத்துவாவை தகர்க்கிறாள். அவள் முதலாளித்துவத்தை அழிக்கிறாள். அனைவரையும் தன் ஆயிரம் கரங்களால் அரவணைக்கிறாள்” என லீனா மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு 8 முதல் 10 சதவிகித வளர்ச்சி தேவை!

“இந்தியாவில் தனிநபர் வருமானத்தை கணிசமாக உயர்த்தவும், இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அடுத்த 25 ஆண்டு களில் குறைந்தபட்சம் 8 முதல் 10 சதவிகித வளர்ச்சியை எட்ட வேண்டும். சீர்திருத்தங்க ளின் வேகத்தை இந்தியா துரிதப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் பங்கை மறு சீரமைப்பதன் மூலம் தனித்துவமான சாதனைகளை உருவாக்க முடியும். கொள்கைச் சீர்திருத்தங்கள், விவசாயத்தில் புதுமை, தொழிலாளர் சட்டங்களை எளிதாக்குதல் மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை விரிவுபடுத்தினால் இந்தியா இந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும்” என்று தில்லியில் ஒன்றிய நிதியமைச்சகம் ஏற்பாடு செய்த அருண்ஜெட்லி நினைவு சொற்பொழிவில் சிங்கப்பூர் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் பேசியுள்ளார்.

எண்ணெய் விலையை ரூ. 15 குறைக்க உத்தரவு!

சர்வதேசச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், . உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, சமையல் எண்ணெய்யின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் உடனடியாக 15 ரூபாய் குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல்  எண்ணெய் சங்கங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விலைக் குறைப்பு  எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க, உற்பத்தியாளர்களும், சுத்திகரிப்பா ளர்களும், விநியோகஸ்தர்களுக்கான விலையை உடனடியாக குறைக்க வேண்டும்; விலைச்சரிவின் பயன் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

‘ஆம்னெஸ்டி’ நிறுவனத்துக்கு ரூ. 51 கோடி அபராதம்!

‘ஆம்னெஸ்டி இண்டர்நேசனல்’, சர்வதேச அளவில் இயங்கும் மனித உரிமை அமைப்பாகும். இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சியில் தலித்துக்கள், சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும் இந்த அமைப்பு தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில், ஆம்னெஸ்டி அமைப்பு வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக நிதி பெற்றதாக கூறி, அந்நிறுவனத்துக்கு இந்திய அமலாக்கத்துறை ரூ. 51 கோடியே 72 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது. ஆம்னெஸ்டி அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆகார் படேலுக்கும் ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகை: முதல்வர் வாழ்த்து

சென்னை, ஜூலை 9- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பக்ரீத் வாழ்த்து செய்தி வருமாறு:- ‘தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெரு நாள் நல்வாழ்த்துகள். அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அற நெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடு களோடு, நபிகள் நாயகம் அளித்த  போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். நபிகள் நாயகத்தின் போதனை களுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப் பாடுகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்பு டன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப்பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரூ.1000 ஊக்கத் தொகை: விண்ணப்பிக்க  இன்று கடைசி நாள்

சென்னை,ஜூலை 9- அரசுப் பள்ளிகளில்படித்த மாண வியர் உயர்கல்விபயிலும் விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்பக் கல்வி,கலை மற்றும் அறிவியல் போன்ற  இளநிலை கல்விபயிலும் மாணவி களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும். இத்தொகை மாணவியின் வங்கி  கணக்கில் நேரடியாக வழங்கப்பட வுள்ளது. இதற்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து உயர்கல்வித்துறை செய லாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள தகவலில், “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்  திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30 ஆம் தேதி வரை யில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.  பின்னர், இதற்கான  காலக்கெடு ஜூலை 10 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்வி யில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில்  இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3ஆம் ஆண்டு  மாணவியர்கள் பதிவு செய்ய லாம். மேலும் இது குறித்து கூடு தல் விபரங்களை 14417 என்ற  எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை, ஜூலை 9- லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் தில்லியிலிருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் கார்த்தி  சிதம்பரத்தின் வீட்டில் சோதனை  நடத்தினர். அந்த சோதனையின் போது, நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் ஓர் அறை பூட்டப் பட்டிருந்தது. இதனால், அந்த  அறையில் சோதனை நடத்தப்பட வில்லை. ஏற்கெனவே மேற்கொள் ளப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக சனிக்கிழமையன்று (ஜூலை 9) மீண்டும்   7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.