திருவனந்தபுரம், மே 9- முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழக-கேரள மாநிலங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு வினர் ஆய்வு செய்தனர். பருவ காலநிலை மாறு பாடுகளான மழை மற்றும் வெயில் காலங்களில் முல் லைப் பெரியாறு அணை யின் பாதுகாப்பு மற்றும் உறு தித்தன்மையை பற்றி உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித் தது; தற்போது கூடுதலாக 2 பேரை நியமித்துள்ளது. அதன்படி, தமிழக பிரதி நிதியாக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக் சேனா, கேரள பிரதிநிதியாக நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை பொறியாளர் டி.கே.ஜோஸ், கூடுதலாக தமிழகம் சார்பில் சேர்க் கப்பட்ட காவேரி தொழில் நுட்ப குழும தலைவர் சுப்பி ரமணியம், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகி யோர் சேர்ந்து முல்லை பெரி யாறு அணை பகுதியில் முதல்முதலாக திங்களன்று ஆய்வு மேற்கொண்டனர். 1,200 அடி நீளமுடைய பிரதான அணை, பலப் படுத்த வேண்டிய 240 அடி நீளமுடைய பேபி அணை மதகு பகுதிகளில் உள்ள 13 மதகுகள் இயக்கம் மற்றும் 2 சுரங்க பகுதிகளில் அவர் கள் ஆய்வு செய்தனர். தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன் அணை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித் தும் ஆலோசனை மேற் கொண்டனர். தில்லியில் நடைபெறும் கலந்தாலோ சனை கூட்டத்திற்கு பின் ஆய்வு அறிக்கை 2 மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.