அகமதாபாத், ஜூலை 17- குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளில், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சிக்க வைக்கவும், ஆட்சி யை கலைக்கவும் சமூக ஆர் வலர் டீஸ்தா செதல்வாட், முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர், காங்கிரஸ் தலை வர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலி டம் ரூ. 30 லட்சம் பணம் பெற்ற தாக சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த சங்-பரிவாரங்கள் அரங்கேற்றிய குஜராத் வன் முறை தொடர்பான வழக்கு களில், நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு நற்சான்றி தழ் அளித்தது. இதனை எதி ர்த்து, காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி சட்டப்படி எந்தவித குற்றச்சாட்டும் இல் லாதவராக மாறினார். இவ்வாறு உச்சநீதி மன்றத்திலும் தங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டதால், தங்களின் வழக்கமான ஆட டத்தை ஆரம்பித்த மோடி அரசு, குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் பொய் ஆதாரங்கள், சாட்சி களை உருவாக்கிய குற்றச் சாட்டின் பேரில் சமூக ஆர்வ லர் டீஸ்தா செதல்வாட், ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்தது.
ஜூலை 2-ஆம் தேதி அக மதாபாத்தில் உள்ள மெட்ரோபோலிட்டன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட இவர்கள் இருவரை யும் 14 நாள் நீதிமன்ற காவ லில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாரால் முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டும் கைதானார். டீஸ்தா செதல்வாட், சஞ்சீவ் பட், ஸ்ரீகுமார் ஆகி யோர் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக் கப்பட்டது. இதனிடையே, டீஸ்தா மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்த தால், சிறப்பு புலனாய்வு குழு துணை போலீஸ் கமிஷனர் சோலங்கி சார்பில் அரசு வழக்கறிஞர்கள் மிதேன் அமீன் மற்றும் அமித் படேல் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்டது. அந்த பிரமாணப் பத்தி ரத்தில், “காங்கிரசிடம் இருந்து சலுகைகள் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள், மிகப்பெரிய சதியில் ஈடு பட்டுள்ளனர். அவர்கள் அக மது படேலுடன் பல முறை சந்தித்துள்ளனர். முதலில் ரூ.5 லட்சம் பெற்று கொண்ட அவர்கள், பின்னர் 2 நாட்கள் கழித்து ரூ. 25 லட்சம் பெற் றுக் கொண்டனர். கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து, கலவரம் ஏற்பட்ட பின்னர், மூவரும் சேர்ந்து, அப் போது முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட பலர் மீது அவதூறு செய்ய உச்சநீதி மன்றம் முதல் பல கமிஷன் களில் பல மனுக்களை அளித்தனர்” எனக் கூறப்பட் டுள்ளது.