states

img

சம்பள பாக்கி ரூ.17 ஆயிரம் கோடி - எம்.சின்னதுரை எம்எல்ஏ

ஒன்றிய பாஜக அரசானது, சாதாரண ஏழை,  அடித்தட்டு மக்களுக்கு பயன்பட்டு வரும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை குறைத்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டு  ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வார்கள் என  எதிர்பார்த்த நிலையில் வெறும் ரூ.60 ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தது. அதிலும் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் விவசாயத் தொழி லாளர்களுக்கு  ரூ.17 ஆயிரம் கோடி  சம்பளம் பாக்கியாக உள்ளது.  இத்திட்டத்திற்கு உரிய  நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 10,11ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

பந்த் போராட்டத்திற்கு ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கர்நாடகா மாநில அரசு காவிரியில் தண்ணீர் தர மறு க்கிறது. இதை ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே, மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று நடைபெறும் பந்த் போராட்ட த்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆதரிக்கிறது; பங்கேற்கிறது. தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கியதை வரவேற் கிறோம். அதேவேளை, உரிமைத் தொகை கிடைக்காமல் ஏராளமான ஏழைப் பெண்கள் உள்ளனர். அவர்கள் மேல்முறையீடு செய்ய  அதற்கான இணையதளத்திற்குள் செல்ல முடி யாத நிலை உள்ளது. எனவே, தகுதியான அனை த்து ஏழைப் பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, நகைக் கடன்களை தள்ளுபடி செய்தது. அதில் தள்ளுபடி ஆகாதவர்கள்  மேல்முறையீடு செய்தும் தற்போது வரை பணம் கிடைக்கவில்லை. அதை உடனடியாக வழங்கிட  வேண்டும்.

கூலியை உயர்த்துங்கள்!

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இதற்கு தனித்துறை யை தமிழக அரசு உருவாக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு தினசரி சட்டக் கூலியாக வெறும் ரூ.190 மட்டுமே உள்ளது. இதை ரூ.600ஆக உயர்த்த வேண்டும்.

வீடு வழங்கும் திட்டத்தில் தமிழகம் புறக்கணிப்பு

ஒன்றிய அரசு, கடந்த இரு வருடங்களாக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் சரிவர அமல்படுத்தவில்லை. தமிழ கத்தில் திமுக ஆட்சி இருப்பதால் ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்து வருகிறது. அதற்கான நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு திட்டம் விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு. இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 2 கி.மீ மட்டுமே கால்வாய் வெட்டும் பணி நடை பெற்றுள்ளது. போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை.  தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி  மக்கள் தென் மாவட்டங்களில் உள்ளனர். அவர் களின் குடிநீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பெருக்க இத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். செண்பகவல்லி தடுப்பணையில்  பல ஆண்டுகளுக்கு முன்பே உடைப்புகள் ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வேறு பகுதிக்கு வீணாகச் செல்கிறது. எனவே, அதை சீர் செய்து  விருதுநகர் மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.