states

பேருந்து கட்டணம் உயர்வா? போக்குவரத்து அமைச்சர் மறுப்பு

சென்னை, மே 16- பேருந்து கட்டண உயர்வு குறித்த செய்திகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், அரசு பேருந்துகள் கட்டண உயர்வு  குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு  குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படு கின்றன. அது குறித்து என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் செய்யும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப் பட்டால், அந்த மாநிலத்தில் நுழை யும் மற்றொரு மாநில பேருந்து கள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும். கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத் தின் பேருந்துகள் அந்த மாநிலத்தில்  நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்ட வணையை குழப்பிக் கொண்டு, “தமிழ்நாட்டில் இயங்கும் அனைத் துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது”என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத் தில் போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்கு வரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், தமிழக முதல்வர் எளிய மக்களுக்கு உதவிடும் வகை யில் கட்டண உயர்வில் லாமல் அரசு போக்குவரத்து கழக  பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், “கட்டண உயர்வு அட்ட வணை தயாராகி விட்டது” என்ற தவ றான செய்தியை பரப்ப வேண் டாம்.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.