மேட்டூர் அணை நீர்மட்டம் 31.30 அடியாக குறைந்தது
சேலம், அக். 9 - மேட்டூர் அணையின் நீர் மட்டம், திங்கட்கிழமை காலை நிலவரப்படி 31.72 அடி யிலிருந்து 31.30 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநா டிக்கு 139 கன அடியிலிருந்து 122 கன அடியாக குறைந்துள் ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாச னத்திற்கு விநாடிக்கு 2000 கன அடி விகிதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கலைஞர் நூலகத்தில் சட்ட நூல்களுக்கு தனிப்பிரிவு
மதுரை, அக்.9- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் சுமார் 206 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யின் நூலகப் பிரிவு அமைக் கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் இந்தப் பிரிவில் சட்டநூல்கள் இடம் பெற்றுள்ளன.
புதுக்கோட்டை : டெங்கு பாதிப்பு 82 ஆக உயர்வு
புதுக்கோட்டை, அக்.9- புதுக்கோட்டை மாவ ட்டத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலை யில் ஒன்பது வயது மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகள் டெங்கு காய்ச்ச லால் பாதிப்படைந்துள்ள னர். மாவட்டத்தில் ஏற்கனவே 76 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தனர். தற்போது மேலும் ஐந்து பேர் பாதிப்படைந்துள்ளதால் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
அக். 12-இல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம்
சென்னை, அக். 9 - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை பேரில் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை அரைகுறையாக கர்நாடகா அமல்படுத்தி வந்தது. ஆனால் தமிழ்நாட்டி ற்குத் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நா டக மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தூண்டு தல் பேரில் போராட்டங்கள் நடைபெற்றன. செப்டம்பர் 29 அன்று பந்த் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திய கர்நாடக அரசு, முதல்வர் சித்தராமையா தலைமை யிலான ஆலோசனைக்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, செப்டம்பர் 30 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தது. இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 88-ஆவது கூட்டத்திற்கு, அக்டோபர் 12 அன்று குழு தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.
சாந்தன் வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி மோகன் விலகினார்
சென்னை, அக்.9- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன் தாக்கல் செய்த தம்மை இலங்கைக்கு அனுப்பக்கோரும் மனு வை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து நீதிபதி மோகன் விலகினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன் கடந்த ஆண்டு சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். சாந்தன் தனது சொந்த நாட்டி ற்கு செல்லும் வரை சிறப்பு முகாம் எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் வல்வெட்டியில் வசிக்கும் தனது 75 வயது தாய் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருப்பதால், தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு திங்கட்கிழமை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதி பதி மோகன் மனுவை விசாரிப்பதி லிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறை க்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி மோகன் வழக்கறிஞராக பணியாற்றிய போது சாந்தன் தொடர்பான வழக்கில் ஆஜரானதால் மனுவை விசா ரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.
உ.பி.யில் ரூ.4 கோடி மோசடி செய்த தபால்காரர்
பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் மெயின் புரி மாவட்டத்தில் உள்ளது அவுகௌதா தபால் நிலையம். இந்த தபால் நிலையத்திற்குட்பட்ட 16 கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை சேமிப்பு கணக்கில் வரவு வைத்து வந்துள்ளனர். 16 கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு வராக தங்களுடைய பணத்தை திரும்பப் பெறுவதற்காக தபால் நிலை யத்திற்கு வந்தனர். ஆனால் அவர் களின் கணக்கில் பணம் இருப்பு இல்லா ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். போலீ சார் விசாரணையில் 16 கிராம மக்களின் கிட்டத்தட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள சேமிப்பு பணத்தை அவுகௌதா தபால் நிலையத்தில் பணிபுரியும் தபால் காரர் ஓம் பிரகாஷ் ஷக்யா கையாடல் செய்தது தெரியவர அவர் மீது 3 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள் ளது. ஓம் பிரகாஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலட்சியமாக இருந்ததாக அவுகௌதா தபால் நிலையத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘காவிரி பிரச்சனையில் பழனிசாமிக்கு புரிதல் இல்லை’
“பாஜக., கூட்டணியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விலகியும் காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவே அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு அடிப்படைப் புரிதல் இல்லை. ஒன்றிய அரசைக் காப்பாற்றவே பழனிசாமி துடிக்கிறார். ஒன்றிய பாஜக அரசை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்திலேயே பழனிசாமி சட்ட மன்றத்தில் பிரச்சனையை எழுப்பியுள் ளார். ஒன்றிய அரசிற்கே பொறுப்புள்ளது என்பதை தனது பேச்சின் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பாஜக மீது கூட்டணியை விட்டு விலகி யும் அதிமுகவுக்கு பாசம் தொடர்கிறது. காவிரி நீரை பெற்றுத்தருவதற்கான முழுப்பொறுப்பு ஒன்றிய அரசிற்கே உள்ளது. காவிரி தீர்மானத்தில் ஒன்றிய அரசை மட்டுமே குறிப்பிட்டுள்ளதை பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்க த்தை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத பாஜக-வை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.
இஸ்ரேலில் காயம் அடைந்த ஷீஜா ஆனந்த் உறவினர்களுக்கு ஜான் பிரிட்டாஸ் எம்.பி ஆறுதல்
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயம் அடைந்த கண்ணூர் வலக்கையைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்பவரின் தாய் மற்றும் சகோதரியை அவர்களது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இஸ்ரேல் நேரப்படி சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஷீஜா காயமடைந்தார். இந்த நேரத்தில், ஷீஜா தனது வீட்டிற்கு வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார். பலத்த வெடிச்சத்தம் கேட்டது. தொலைபேசி உரையாடல் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் ஷீஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஷீஜா வேலை செய்யும் வீட்டில் உள்ளவர்களும் காயமடைந்துள்ளனர். ஷீஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக பெர்சாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வலக்கையைச் சேர்ந்த ராஜன், சரோஜினி தம்பதியரின் மகள் ஷீஜா. பையாவூரைச் சேர்ந்த ஆனந்தை திருமணம் செய்துள்ளார். அவனி மற்றும் அனாமிகா என்கிற குழந்தைகள் உள்ளனர். ஷீஜா தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோனில் ஏழு வருடங்களாக வேலை செய்து வருகிறார்.
பேரவையில் ஆஸி. நாடாளுமன்றக் குழு
சென்னை,அக்.9- தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் திங்களன்று(அக் 9) நடைபெற்றது. முதல் ஒரு மணி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது, ஆஸ்திரேலிய நாடாளு மன்ற தலைவர் மில்டன் டிக் தலைமை யில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தூதரக அதிகாரிகள் உள்பட 11 பேர் சட்டப்பேரவை நடவடிக்கை களை பார்வையிட்டனர். அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மக்களின் சார்பில் பேரவைத் தலைவர் மு. அப்பாவு வரவேற்றார்.
ஓபிஎஸ் இருக்கையில் மாற்றமில்லை!
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியி லிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கக் கோரி சட்டப்பேரவை தலைவர் அப்பா வுக்கு அதிமுகவினர் கடிதம் எழுதியி ருந்தனர். இருப்பினும், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி இருக்கையின் அருகே உள்ள துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திங்களன்று (அக்.9) சட்டப்பேரவை கூடிய போதும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது. கூட் டம் தொடங்குவதற்கு முன்னதாக எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவரிடம் மீண்டும் ஓபிஎஸ் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இருக்கையில் எந்த மாற்ற மும் செய்யப்படவில்லை.
காவிரி டெல்டா ‘பந்த்’ : விசிக ஆதரவு!
சென்னை, அக். 9- காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அக்டோபர் 11 அன்று முழு கடை அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கும் அன்றைய தினம் ஒன்றிய அரசு அலுவல கங்கள் முன்பாக நடத்தப்படும் மறியல் போராட்டத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரி வித்துள்ளார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும்!
சென்னை, அக்.9- காளிங்கராயர் அணையில் தண்ணீர் வந்த பிறகு அத்திக்கடவு -அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் செங்கோட்டை யன் எழுப்பிய துணை கேள்விக்கு பதிலளித்த அவர் “அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை; ஆகையால் காளிங்க ராயன் அணையில் தண்ணீர் வந்தவுடன் இத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்” என்றார்.
பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை, அக்.9- கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம்ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக அவர் மீதும், அவரது மனைவி விசா லாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை மறு ஆய்வு செய்யப்போவதாக கூறினார். இந்த நிலையில், 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி நடைமுறைப்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்களன்று (அக்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசார ணையை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ரூ.5,330 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு
சென்னை, அக்.9- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சிவகாசி க.அசோ கன், மானாமதுரை அ.தமிழரசி, பண்ருட்டி த.வேல்முருகன், சேலம் மேற்கு ஆர்.அருள் ஆகி யோர் எழுப்பிய வினாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்தார். சிவகாசி, விஸ்வநாத சுவாமி கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார். அண்மையில் பழனியில் நடை பெற்ற குடமுழுக்கு விழாவில் கூட தமிழில் குடமுழுக்கு செய்யப் பட்டது. படிப்படியாக அன்னைத் தமிழில் வழிபாடு அனைத்து கோயில்களிலும் கொண்டு வரப்படும். தமிழ்நாடு முழுவதும் ஆக்கிர மிப்பில் இருக்கும் கோவில் சொத்துக்களில் இதுவரைக்கும் ரூ.5,330 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்து சமய அற நிலை யத் துறையிடம் உள்ள கோவி ல்களை தனியாரிடம் ஒப்படை யுங்கள் என்று ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த (ஆர்எஸ்எஸ்) கூட்டத்தை சார்ந்த 9 நபர்களிடம் இருந்து ரூ.700 கோடி சொத்துக்களை மீட்டு எடுத்துள்ளேன். இந்த பணி தொடரும் என்றார்.