மேட்டூர், ஏப்.2- மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடியாக இருந்த நீர்வரத்து மேலும் சரிந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 35 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடி நீருக்காக திறந்து விடப்பட் டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 105.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை(ஏப்.2) மேலும் உயர்ந்து 105.21 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப் புள்ளது.