states

பிபர்ஜாய் புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது!

அகமதாபாத், ஜூன் 13 - அரபிக் கடலில் அதிதீவிர புய லாக உருமாறியுள்ள ‘பிபர்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச்  வளைகுடா - சௌராஷ்டிரா பகுதி களுக்கு இடையே வியாழக்கிழமை  (ஜூன் 15) மாலை கரையைக் கடக்  கும் என கணிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்தப் புயல் பலத்த சேதத்தை  ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது. குறிப்பாக, புயல் கரையைக் கடக்கும் போது, குஜராத் மாநி லத்தின் கட்ச் வளைகுடா, தேவபூமி  துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர்,  ராஜ்கோட், ஜுனாகர், மோர்பி மாவட்டங்களில் ஜூன் 15, 16 தேதி களில் 20 செ.மீ. அளவிற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்  றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை வீசுவதற்கு வாய்ப்புள்  ளதாக வானிலை ஆய்வு மைய  தலைவர் மிருத்யுஞ்சய் மொஹ பத்ரா கூறியுள்ளார்.  இதன்காரணமாக, கரையோ ரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்  பான இடங்களுக்குச் செல்வதுடன்,  கடலில் 3 முதல் 6 மீட்டர் உயரத்திற்கு  அலைகள் எழும் என்பதால், மீனவர்  கள் ஜூன் 16-ஆம் தேதி வரை கட லுக்குள் செல்ல வேண்டாம் என்றும் மொஹபத்ரா எச்சரித்துள்ளார். முன்னதாக, பிபர்ஜாய் புயல்  கரையை கடக்கும்போது மிகப்  பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று, இந்திய வானிலை மையம்  விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, புயலை எதிர்கொள்வது தொடர் பாக, பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் தில்லியில் திங்களன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.  இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்  வேறு துறைகளை சேர்ந்த உயர் அதி காரிகள் பங்கேற்றனர். இக்கூட் டத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்  தவர்களான மான்சுக் மாண்டவியா, புருசோத்தம் ரூபலா, தர்சன் ஜர் டோஷ், மகேந்திர முன்ஞ்பாரா உள்பட 5 ஒன்றிய அமைச்சர்களை கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிர தமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி னார். அதன்பேரில் 5 ஒன்றிய அமைச்  சர்களும் குஜராத்தில் முகாமிட்டுள் ளனர்.

அவர்கள் மாநில உயர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, பாது காப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, குஜராத்தின் ஜக்கவு துறைமுகப் பகுதியில் புஜ் ராணுவ தளமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியா ளர்களைச் சந்தித்த மான்சுக் மாண்ட வியா, “புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக குஜராத்தில் கடற்  கரையோரம் வசித்துவந்த 8,000  பேர் அவர்களின் குடியிருப்புப் பகுதி களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும், ஒன்றிய அரசு, மாநில  அரசு, இந்திய விமானப்படை, கடற்  படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சேர்ந்து  ‘பிபர்ஜாய்’ புயலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்து வருவதாக வும் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான கால்நடைகளும் கூட  பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக  கூறினார். தற்போது போர்பந்தரின் 31 கிரா மங்களிலிருந்து 3,000 பேரும் தேவ பூமி துவாரகா மாவட்டத்திலிருந்து 1,500 பேரும் பாதுகாப்பான இடங்க ளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.  கட்ச் மாவட்டத்தின் கடற்கரையோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை  விதிக்கப்பட்டு உள்ளது. இந்த  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி களுக்கும் ஜூன் 15 வரை விடு முறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், ராணுவம், கடற் படை மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் மாவட்ட  நிர்வாகங்கள் தொடர்ந்து தொடர் பில் வைக்கப்பட்டு உள்ளன. குஜ ராத்தில் ஜக்கவு துறைமுகப் பகுதி யில் பூஜ் ராணுவ தளமும் தயார்  நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அரபிக் கடலின் கிழக்கு மத்திய  பகுதியில், ஜூன் துவக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது.  அது கடந்த 6-ஆம் தேதி புயலாக மாறியது. ‘பிபர்ஜாய்’ (Biparjoy) என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல்  வடக்கு திசை நோக்கி கடந்த சில  தினங்களாக நகர்ந்து வந்தது. இந்த  நிலையில் அது தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் அடுத்தடுத்து மாறியது. வடகிழக்கு அரபிக் கட லில் நிலை கொண்டிருக்கும் ‘பிபர் ஜாய்’ புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில்  நகர்ந்து வருகிறது. இந்த அதிதீவிர  புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தற்போது 250 கி.மீ. தொலை வில் உள்ளது. இது வியாழக்கிழமை யன்று குஜராத்தின் ஜக்காவ் துறை முகப் பகுதியில் கரையைக் கடக்கும்  என்று வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.

1965-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில், இந்தியாவின் மேற்கு மாநிலங்களைத் தாக்கும் மூன்றாவது புயல் இதுவாகும். 1965  முதல் 2022 வரையிலான தரவு களின் அடிப்படையில், அரபிக்கட லில் 13 புயல்கள் உருவாகியுள்ளன. இவற்றில் இரண்டு குஜராத் கடற் கரை வழியாகவும், மகாராஷ்டிரா, பாகிஸ்தான் கடற்கரை வழியாக தலா ஒன்றும், ஓமன்-ஏமன் கடற்க ரைகள் வழியாக மூன்றும் கரை யைக் கடந்துள்ளன. ஆறு புயல்கள் கடலிலேயே வலுவிழந்துள்ளன.  இந்தப் பின்னணியில், பிபர்ஜாய்  புயலானது, 15-ஆம் தேதி குஜ ராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளுக்கு இடையே கரையைக்  கடக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மேலும், பிபர்ஜாய் புயலா னது, அதிக ஆயுட்காலம் கொண்ட  புயலாக மாறும் வாய்ப்பு உள்ள தால், அது ஜூன் 16-ஆம் தேதி ராஜஸ்  தானுக்குள்ளும் நுழைய வாய்ப்புள்  ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புய லுக்கு ‘பிபர்ஜாய்’ என்ற பெயரை சூட்டியது வங்கதேசம் ஆகும். பிபர்ஜாய் என்பதற்கு பேராபத்து என அர்த்தம். இதனிடையே, குஜராத் மாநி லத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு செவ்வாயன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.