states

தமிழகத்தில் காலி மருத்துவ இடங்கள் : உச்சநீதிமன்றம் செல்ல முடிவு

சென்னை, அக்.22- அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்கும்படி சட்டரீதி யாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் ஞாயிறன்று நடை பெற்ற மார்பக புற்றுநோய் விழிப்பு ணர்வு நிகழ்வில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  மருத்துவ இடங்களில் 15 சத வீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும், 85 சதவீதம் மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளன. இதில் கடந்தாண்டு, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஆறு இடங்கள் காலியாக இருந்தன. இந்தாண்டு 83 இடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சட்டரீதி யாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.