states

வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர் பயிற்சி கட்டணம் குறைப்பு: அமைச்சர்

சென்னை,ஜூலை 29- வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களின் பயிற்சி கட்ட ணம் 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-  வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் படிப்பு  முடிந்து திரும்பிய பிறகு பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வசூலிக்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை ரூ.2 லட்சம் வசூலிக்கிறது. ஆக மொத்தம் பயிற்சி பெற ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு வெளி நாடுகளில் படித்து வரும் மாணவர் கள் இங்கு பெரிய அளவில் பணம்  கட்ட முடியாததால்தான் கடுமை யான குளிர் போன்ற சிரமங்களை யெல்லாம் தாங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பயிற்சி பெற ரூ.5 லட்சம் என்பது மிக அதிகமான கட்டணமாக இருப்பதாக அரசிடம் முறையிட்டார்கள். அதனை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மருத்துவ பல்கலைக்கழகம் வசூலித்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை குறைத்து வெறும் ரூ.30ஆயிரம் மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டது.  இதே போல், மக்கள் நல்வாழ்வுத்  துறை வசூலித்து வந்த ரூ.2 லட்சமும்  முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படு கிறது. ஆக இனி வெளிநாட்டில் படித்து இங்கு பயிற்சி பெற விரும்பும்  மாணவர்கள் ரூ.30 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும். அதேபோல் வெளிநாட்டில் படித்து வரும் மாணவர்களில் 7.5 விழுக்காட்டினர் மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்பட்டது. இப் போது அதையும் தேசிய மருத்துவ  கவுன்சில் கவனத்துக்கு கொண்டு சென்று 20 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளது. குரங்கு அம்மை இல்லை கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான  தகவல் உண்மை இல்லை. குரங்கு  அம்மை நோய் குறித்து யூகங்க ளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.  தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. குரங்கு  அம்மை நோய் பாதிப்பு தொடர் பான தகவலை முறையாக பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறி யுள்ளார். கனடா மற்றும் அமெரிக்கா வில் இருந்து வந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   இவ்வாறு அவர் கூறினார்.