states

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு: 3 ஆயிரம் பேர் குவிந்தனர்

சென்னை, ஜூலை 27- மருத்துவப் படிப்பிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பொது கலந்தாய்வு கடந்த 24 ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை கிண்டி யில் வியாழனன்று நேரடியாக நடந்தது. முதலில் விளையாட்டு வீரர்களுக்கான 7 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு 11 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான 223 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. அதனை தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த  மாணவர்களுக்கு கலந்தாய்வு  நடந்தது. 606 மருத்துவ இடங்களுக்கு 2,993 பேர் அழைக்கப்பட்டனர்.  கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில்  முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.)யை தேர்வு செய்தனர். அதை தொடர்ந்து ஸ்டான்லி, கே.எம்.சி., கோவை, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர். முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழ னன்று (ஜூலை 27) கல்லூரியில் சேருவதற் கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்.