சென்னை, ஏப். 22 - 7850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க கோரி மே.9 அன்று ஒன்றிய அளவில் 200 மையங்களில் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்தணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நாராயணன், பொதுச் செயலாளர் இ.மாயமலை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வூதியர் நலன் மானிய கோரிக்கை மீதான விவாதம் மே.9அன்று சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒன்றிய அளவில் 200 மையங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனை யொட்டி ஓய்வூதியர்களின் கோரிக்கை கள தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும், அனைத்துக் கட்சி சட்டமன்றக் குழுத் தலை வர்களையும் சந்தித்தும் மனு அளிக்கப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.