ஆதியன் பழங்குடி மக்களுக்கு எஸ்டி சான்று: மாரிமுத்து கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.17) நடந்த கேள்வி நேரத்தின்போது, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை என்று பல்வேறு மாவட்டங்களிலும் வசித்து வரும் ஆதியன் பழங்குடி மக்களுக்கு எஸ்டி சாதிச் சான்று வழங்கப்பட்டுள் ளது. ஆனால், எனது திருத்துறைப் பூண்டி தொகுதியில் மட்டும் பிற்படுத் தப்பட்டோருக்கான (பிசி) சான்று வழங்கப்படுகிறது. இது குறித்து அரசு பரிசீலிக்குமா? என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “உறுப்பினர் தெரிவித்தது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.
குரும்பன்ஸ், லம்பாடி, மக்களுக்கும் எஸ்டி சான்று: எம்எல்ஏக்கள் கோரிக்கை
கே.பி.சங்கர் (திமுக): தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் மக்கள் வசித்து வருகிறார் கள். இவர்களை பழங்குடி பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனாலும், சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி 2வது வார்டு ராமமூர்த்தி நகரில் எஸ்டி சாதிச் சான்று வழங்க அரசு முன்வருமா? மு.பெ.கிரி (திமுக): எனது சட்டமன்ற தொகுதியான செங்கம் பகுதியில் லம்பாடி, குறும்பன்ஸ், மலையாளி பிரிவுகளை சேர்ந்த பழங்குடி மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இந்த குடும்பங்களுக்கு எஸ்டி சாதிச் சான்று வழங்காமல் உள்ளதால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப் படுகிறது. எனவே, அரசு உரிய விசா ரணை செய்து சாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: பூர்வீகமாக வசித்து வரும் பகுதிகளில் எஸ்டி சான்று விரைவில் கிடைத்துவிடும். இடம்விட்டு இடம் மாறும்போது ரத்த சொந்தங்கள், உறவுகள் இருந்தால் சாதிச் சான்று வழங்கப்படுகிறது. எஸ்டி சாதிச் சான்று கொடுப்பதில் அதிகாரிகளுக்கும் சிரமம் உள்ளது. எனவேதான் தவறுகள் நடை பெறுவதை களைவதற்கு உரிய ஆய்வுகளும், விசாரணையும் நடை பெறுகிறது. இதனால் சற்று காலதா மதம் ஏற்படுகிறது”என்றார்.
சித்தா பல்கலைக் கழகம் எப்போது?
சென்னை மாதவரத்தில் சித்தா மருத்துவ பல்கலைக் கழக பணிகள் எப்போது துவங்கும் என்று திமுக உறுப்பினர் சுதர்சனம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,“நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா மருத்து வத்திற்கு பல்கலைக் கழகம் ஒன்று துவங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. மேலும், அதற்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அவர் சில விள க்கங்களை கேட்டார். உடனடியாக பதில் கொடுத்துவிட்டோம். அனுமதி கொடுப்பார் என்று சென்னை மாத வரம் பால்பண்ணையில் 25 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து வைத்திருக்கி றோம். ஆளுநர் அனுமதி கொடுத்ததும் பணிகள் விரைந்து துவங்கப்படும்” என்றார்.
பத்திரப் பதிவு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு மசோதாவுக்கு சிபிஎம் எதிர்ப்பு
சென்னை, ஏப்.17- தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தும் வகையில் கொண்டு வரப்படும் மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பெ.மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:- 2001 ஆம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்திருப்பதால் முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 15 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரை தாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத் தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவதற்கு வழிவகை செய்யும் இந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக நாகைமாலி தெரிவித்தார்.
கருப்புத் துணியால் மூடப்பட்ட பென்னிகுயிக் சிலை: அமைச்சர் விளக்கம்
சென்னை, ஏப்.17- ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழ் நாட்டு மக்களுக்காக பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்தார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வா தாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றன. இம்மாவட்டங் களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பென்னி குயிக் சிலை கருப்புத் துணியால் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று (ஏப்.17)நேரம் இல்லா நேரத்தில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், “விவரங்களை அரசு அறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக் கைகளை எடுத்து, பேரவையில் தெரிவிப்போம்” என்றார்.
ஒரு மாற்றுத்திறனாளிகூட மனவருத்தம் அடையக் கூடாது!
சென்னை, ஏப்.17- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“இந்த ஆண்டு பட்ஜெட்டில், இந்த துறைக்காக ரூ.1106.49 கோடி ஒதுக்கப்பட்டது. இதுவரை இத்துறைக்கு ஒதுக்கப்பட்டதிலேயே இதுதான் மிகவும் அதிகம்”என்றார். ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடையக் கூடாது. ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் என்றாலும்கூட, அந்தச் செயலை நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக-வுக்கு தென்னிந்தியாவுக்கான வாசலும் மூடப்பட்டுவிட்டது: மொய்லி
“பிரதமர் மோடியின் வாய்ஜாலம் கர்நாடகாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழ்நாட்டில் அவர்கள் முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதேபோல் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சாரம் கேரளாவில் எடுபடவில்லை. இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கத்திலும் அவர்கள் பிரச்சாரம் எடுபடவில்லை. தற்போது கர்நாடகாவிலும் இவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். தென்மாநிலங்களின் நுழைவு வாயிலாக பாஜக கருதிய கர்நாடகத்தின் கதவும் மூடப்பட்டு விட்டது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
சிவசேனா உடனான கூட்டணி நீடிக்கும் : சரத் பவார்
“கடந்த செவ்வாய்க்கிழமை சரத் பவார், உத்தவ் தாக்கரேவை சந்தித்தார். அப்போது யாரும், கூட்டணியில் இருந்து வெளியேற விரும்பவில்லை என்று உத்தவ் தாக்கரேவிடம் அவர் கூறினார். யாரேனும் (அஜித் பவார்) வெளியேற முடிவு எடுத்தால், அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.. ஆனால் ஒரு கட்சியாக (நாங்கள் தேசியவாத காங்கிரஸ்) ஒருபோதும் பாஜகவுடன் செல்ல மாட்டோம். பாஜக-வில் சேரும் நபர்கள் அரசியல் தற்கொலை செய்து கொள்வதாகவே அர்த்தம் என்று அவர் கூறினார்” என சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
‘புல்வாமாவை மறைக்க பாலகோட் தாக்குதல்; சத்யபால் அம்பலத்தை மறைக்க உ.பி. கொலை’
புதுதில்லி, ஏப்.17 பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியதை மறைப்பதற்காக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியும், உ.பி., கும்பல் தலைவருமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கொல்லப்பட்டதாக எம்.பி ஜான் பிரிட்டாஸ் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலின் பின்னணி யில் என்ன நடந்தது என்பதை முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வெளிப் படுத்தினார். இது குறித்த விவாதங்கள் சூடுபிடித்த நிலையில், உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்த முன்னாள் எம்.பி அதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜான் பிரிட்டாஸின் ட்வீட்டில் இந்த இரண்டு விஷயங் களும் குறிப்பிடப்பட்டுள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்கு தலின் வீழ்ச்சியை மறைக்க அவர்கள் ஒரு பாலகோட்டை உருவாக்கினர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கின் அதிர்ச்சி தக வலை மறைக்க உ.பி.யில் தற்போது ஒரு கொலை நடந்துள்ளது. உச்ச நீதி மன்றத்தின் மேற்பார்வையில் விசார ணை நடத்தினால் மட்டுமே உண்மை யை வெளிக்கொண்டு வர முடியும் என்றும் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. கூறியிருக்கிறார்.