திண்டுக்கல், பிப்.26- கூட்டுறவுத்துறையை பாதுகாக்கக் கோரி தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னம் (சிஐடியு) சார்பாக மதுரையில் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படு கிறது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேள னம் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம் திண்டுக் கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் ஆ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலா ளர் கே. ஆறுமுக நயினார், சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் ஆகி யோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டுறவு அமைப்பு என்பது மாநில அர சின் கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய அமைப்பாகும். தற்போது ஒன்றிய பாஜக அரசு கூட்டுறவுக்கென தனி அமைச்சகம் உருவாக்கி அதற்கான அமைச்சராக அமித்ஷாவை நியமித்துள்ளது.
இது கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துவ தாகும். மாநில அரசின் நிதி ஆதாரத்தை சுரண்டு வதற்காக புற வாசல் வழியாக மாநில கூட்டு றவு சங்கங்களின் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. மாநிலங்களில் சுயேட்சையாக செயல்படக்கூடிய சங் கங்களை சீர்குலைப்பதற்கு உதவி செய்யக் கூடிய வகையில் இத்திருத்தங்கள் அமைந் துள்ளது. கூட்டுறவு அமைப்புகளை நவீனப்படுத்த வும் பலப்படுத்துவதும் தற்போது உள்ள படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கு வதுதான் சரியாக அமையும். இதை உணரா மல் ஒன்றிய அரசு புதிய நிலைப்பாட்டினை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு அமைப்பு களை பாதுகாக்க ஊழியர்களிடமும் கூட்டுற வாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 25 அன்று மதுரையில் கருத்தரங்கை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதி கரித்து வரும் வேளையில் பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன் றிய நிதியமைச்சர் உணவுக்கான மானி யத்தை வெகுவாக குறைத்திருப்பது. பொது விநியோகத் திட்டத்தை மேலும் பலவீனப்படுத்தும்.பொதுவிநியோகத் திட் டத்தை பாதுகாக்கவும் மாநில அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பொது விநியோக திட்டத்தை தனித்துறையாக்கு வதும் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.