states

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சென்னை, ஜூலை 26- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (24). அவர் தகவல் தொழில்நுட்ப நிறு வனத்தில் (ஐடி) ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 22 ஆம் தேதி இரவு பாரப் பட்டி சாலை விபத்தில் சிக்கினார். இதில் படு காயமடைந்த அவர் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மணிகண்ட பிரபு மூளைச்சாவு அடைந்ததை தெரிவித்தனர். இதையடுத்து, உடல் உறுப்புகளை உறவினர் கள் தானமாக கொடுக்க முன்வந்தனர். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு பொருத் தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி கே.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்த கொண்டு சென்றனர். இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி களுக்கு பொருத்துவதற்காக விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இதயம் மற்றும்  நுரையீரல் எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து 15 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைந்தது. ஆம்புலன்ஸ் சிக்னலில் நிற்காமல் விரைவாக செல்லும் வகையில் போக்குவரத்து காவல்துறை யினர் ஏற்பாடு செய்தனர். கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மணி கண்ட பிரபுவின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.