states

மலேரியா தடுப்பூசி

ஜெனீவா, ஏப்.23- ஆப்பிரிக்காவில் உள்ள 10 லட்சம் குழந்தைகளுக்கு மலேரியா எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உலக சுகாதாரக் கழகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘உலக சுகாதார நாள் (ஏப்ரல் 25) வருவதால் அதையொட்டி கானா, கென்யா, மாலி ஆகிய நாடுகளில் முதல் தவணைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும். அதற்கு முன்னோட்டமாகவே இந்த நாடுகள் தேர்வு செய்யப்பட்டன. இந்தத் தடுப்பூசியால் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் குழந்தை களின் உயிர்கள் பாதுகாக்கப்படும்’’ என்று கூறியுள்ளது.