states

img

தன்னை அருந்ததியராக பாவித்துக்கொண்டு அவர்களுக்காக போராடியவர் தோழர் என்.வரதராஜன்

மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

 திண்டுக்கல். ஏப்.26- தன்னை ஒரு அருந்ததியராக பாவித்துக்கொண்டு அந்த மக்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்காக போராடியவர் தோழர் என்.வரதராஜன் என்று  மதுக்கூர் இராமலிங்கம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாநிலச் செயலாள ரும் மூத்த தலைவருமான தோழர் என்.வரதராஜனின் 10 ஆம் ஆண்டு  நினைவு தின சிறப்புக் கருத்தரங்கம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம் பேசிய தாவது: முதலாளித்துவ பத்திரிகைகள் கூட திணறுகிற இன்றைய காலத்தில் தீக்கதிர் நாளிதழ் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகிறது என்றால் அதற்கு தோழர் என்.வரதராஜன் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் காரணம்.

கோவையில் இந்துத்துவா சக்திகள் நடத்திய மதக்கலவரத்தின் போது எந்த அரசியல் கட்சி தலை வர்களும் தலைகாட்டாத நிலையில்  ஊரே மயானம் போல வெறிச்சோ டிக்கிடந்த நிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டிருந்த போது மதநல்லிணக்கத்திற்காக நேரடியாக களத்திற்குச் சென்று தோழர் என்.வரதராஜன்  மட்டும்  லாரியில் நின்று கொண்டு உரையாடி யதை என்னால் மறக்க முடியாது. அருந்ததியர் மக்களுக்கான உள் ஒதுக்கீடு போராட்டத்தில் தன்னை யும் ஒரு அருந்ததியராக பாவித்துக்  கொண்டு களமாடியவர் என்.வரத ராஜன். அருந்ததிய மக்களை திரட்டி சென்னையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தி அன்றைய முதல் வர் கலைஞரிடம் உள் ஒதுக்கீடு கோரிக்கை குறித்து என்.வரத ராஜன் பேசினார். அதன் பிறகு 3 சத வீத உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்தார்.  எனது மகன் பாரதி பணியாற் றிய மருத்துவமனையில் ஒரு அருந் ததிய பெண் துப்புரவு பணி செய்து  வந்தார். அவரது மகன் பாரதிதாச னும் அதே மருத்துவமனையில் டாக்டராக பணி நியமனம் பெற்றார் என்றால், அதற்கு காரணம் தோழர்  என்.வரதராஜன் நடத்திய போராட்டம் தான் .கோவையில் அருந்ததிய அமைப்புத் தலைவர்கள் கூறும்  போது, ‘நாங்கள் மலம் சுமக்கிறோம்; எங்களை என்.வி.சுமக்கிறார்’ என்றார்கள். 

திண்டுக்கல் நகரத்தில் இஸ்லா மிய,  கிறிஸ்தவ பகுதியில் வாழ்ந்த  தோல் தொழிலாளர்களை, துப்புர வுத் தொழிலாளர்களை திரட்டி போராடுவதில் முன்னின்றார். இன்றைக்கு பாஜக ஒன்றிய அரசு  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரி மைகளை பறித்து ஒரு மலினமான அரசியலை செய்து வருகிறது. மக்கள் அதனை புரிந்து கொண்டு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி பேசுகையில், சாதாரண அடித்தட்டு மக்களுக்காக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்தி லும் போராடியவர் தோழர் என்.வரத ராஜன். ஒரு சமரசமற்ற போராளி யாக திகழ்ந்தார். இங்குள்ள தோல்  கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நஷ்டஈடு கிடைக்க காரண மாக இருந்தார் என்று தெரிவித்தார். 

மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள  66 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு  கியூட் என்ற  நுழைவு தேர்வுகளை அறிவித்துள் ளது. திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்திலும் அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆன்  லைன் மூலம் நுழைவுத் தேர்வு கட்ட ணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின் றன. இந்த நுழைவுத் தேர்வில் ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாட  முறையில் இருந்து தான் கேள்வி தாள்கள் தயார் செய்வார்கள். அந்த கேள்வித்தாளுக்கு மாநில கல்வித் திட்டத்தில் பயின்ற நமது கிராமப்புற மற்றும் நகரப்புற ஏழை மாணவர்கள் எவ்வாறு சரியான விடையை அளிப்பார்கள். எனவே இதனைக் கண்டித்து திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் முன்பாக வருகிற 28ஆம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம் என்று  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகரச்செய லாளர் அரபுமுகமது, சிபிஎம் கவுன் சிலர்கள் கே.எஸ்.கணேசன், ஜோதி பாசு,  மாரியம்மாள், ஒன்றியக் கவுன் சிலர் ஜீவாநந்தினி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,  மாவட்டக்குழு உறுப்பினர் ஆஸாத்,  திலகவதி, சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.