states

பிளவுவாத அரசியலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்: தமுஎகச

சென்னை,ஜூலை 13- பாஜகவின் பிளவுவாத அரசிய லுக்கு எதிராக ஒன்றுபடுவோம் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது பொது சிவில் சட்டம் பற்றி ஜூலை  12 அன்று இணையவழியில் தமுஎகச மாநிலக் குழு தெளிவரங்கம் நடத்தியது.  இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கருத்து கேட்பு என்ற பெயரில் ஒன்றிய  பாஜக அரசு பன்மைத்துவ இந்தியா எனும் தேன் கூட்டின் மீது கல்லெறிந்து  மீண்டும் களேபரத்தைத் துவக்கி யுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமருக் குக் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர்  மாநிலத்துக்கு சிறப்புச் சலுகை வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது  பிரிவை ரத்து செய்தது ஆகிய ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை நடை முறைப் படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, அடுத்து சனாதனக் கூட்டத்தின் திட்டமான பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிக்கிறது. இது சிறுபான்மை மக்கள், பழங்குடி  மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கும் எதிரானது. பொது சிவில் சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங் களைச் சேர்ந்த பழங்குடி மக்கள்  குழுக்களும் சீக்கியர்கள், பார்ஸிகள்  உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டம் என்பது இந்தியா வின் பன்மைத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

மநுஸ்மிருதி உள்ளிட்ட சனாதனச் சட்டங்களில் குற்றங்களுக்கான தண்டனை கூட ஒரே மாதிரியாக இல்லை, சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் தண்டனையின் அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனு அநீதியை மனதுக்குள் மறைத்து வைத்து பூசிப்பவர்கள்தான் அனை வருக்கும் பொது சிவில் சட்டம் என்று வாய்ப்பந்தல் போடுகின்றனர். இன்றைக்கு இந்தியாவில் குற்றவியல் உள்ளிட்ட பெரும்பாலான சட்டங்கள் அனைவருக்கும் பொது வானதாகவே உள்ளன. மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறு களை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சில சட்டங்களில் விதிவிலக்குகளை அனுமதித்துள்ளனர்.

ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துச் சட்டங்களையே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்கத் துடிக்கிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில், அனைத்துத் துறைகளிலும் தோல் வியடைந்துள்ள நரேந்திர மோடி அரசு  மக்களின் கவனத்தை திசை திருப்பும்  குறுகிய அரசியல் நோக்கு அடிப்படை யிலேயே பொது சிவில் சட்டம் குறித்த  விவாதத்தை மீண்டும் துவக்கியுள்ளது. இதே ஒன்றிய அரசின் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 21ஆவது சட்ட  ஆணையம் இப்போதுள்ள சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமும் அல்ல, விரும்பத்தக்கது அல்ல என்று  அறிவித்துவிட்ட நிலையில், 2ஆவது சட்ட ஆணையம் கருத்து கேட்பு என்ற பெயரில் மீண்டும் சர்ச்சையை துவக்கியுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த கடந்த ஒன்பது ஆண்டு களில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்  போடாத நரேந்திர மோடி அரசு, பெண்க ளின் நலனை பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டத்தை கொண்டுவரப் போவதாக கூறுவது கேலிக்கூத்தாகும். பாலினச் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் சட்டங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான விழிப்புணர்வு கருத்தியல் பரப்புரையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் பெண்ணடிமைத்தனத்தை பெரிதும் பற்றி நிற்கும் சனாதன வாதி களால் அதைச் செய்ய முடியாது. அதனாலேயே ஒன்றிய அரசு முன் வைக்கப் போவதாக சொல்லும் பொது  சிவில் சட்டம் அதற்கு எந்த வகையி லும் உதவாது என்பதை இந்தத் தெளிவரங்கம் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.