சென்னை, ஜூலை 24 - மதச்சார்பின்மைக்கான போராட் டம் என்பது மனித மனங்களை வெல்வதே. எனவே, மத நம்பிக்கை யாளர்களின் மனங்களை வெல் வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில்ஒன்றிய பாஜக, சங் பரிவாரங்களின் ‘மதவெறி அரசி யலின் விபரீதங்கள்’ எனும் தலைப்பில் சனிக்கிழமையன்று (ஜூலை 23) சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடை பெற்ற இந்நிகழ்வில் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:
கரின் அரசியல் திட்டத்தை மோடி அரசு அமல்படுத்துகிறது. மத வேறு பாடுகளை கடந்து மக்கள் போராடி பெற்ற சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பத்திரி கையான ஆர்கனைசரின் முதல் இதழ் தலையங்கத்தில் (1947 ஜூலை), இந்தியா இந்து ராஷ்டிரமாக உருவாக வேண்டும் என்று எழுதி னார்கள். மநுவாத அடிப் படையில் அரசியலமைப்பு சட்டம் உருவாக வேண்டும் என்று கோல் வாக்கர் கூறினார். இந்து மதமும், இந்துத்துவா என்பதும் ஒன்றல்ல. மத அடிப்படையில் நாடு, மநு அடிப்படையில் சட்டம், சமஸ்கிரு தம்தான் பிரதான மொழி, நால்வ ருணம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்துத்துவா. மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படை யாக கொண்ட சுயசார்பு பொருளா தாரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற 4 விழுமியங்களை உள்ளடக்கி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. சிறந்த அரசியல் சட்டம் உருவாக்கினாலும், அதை அமல்படுத்தப்படுவது, யார் ஆட்சி பொறுப்பில் உள்ளார்கள் என்பதை பொறுத்தே அமையும் என்று அம்பேத்கர் கூறினார். அது தான் தற்போது நடந்து கொண்டி ருக்கிறது.
அரசியலமைப்பு சட்டம், நாடாளு மன்றம், நீதிமன்றம் இருக்கும். அதன் விழுமியங்களான மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயச்சார்பு தகர்க்கப்படுகிறது. இந்திய பொதுச்சமூகத்தின் சிந்தனையை தஙகளுக்கு ஏற்ப பாஜக மாற்றி வருகிறது. கல்வியை காவிமய மாக்குவதில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேசுகிறார். பாஜக ஆட்சி பொறுப்பேற்றும் போதெல்லாம் ஆர்எஸ்எஸ் க்கு அரசு நிர்வாகத் தோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, சட்டங்களை நுணுக்கமாக திருத்து கின்றனர். அரசியல் சட்டத்தை பாதுகாக்க இந்துத்துவாவை எதிர்த்து போராட வேண்டி உள்ளது. கருத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மதநம்பிக்கையாளர்களை குறி வைத்து வகுப்புவாதிகளாக மாற்று கின்றனர். மத நம்பிக்கையாளர் களிடம் மதநல்லிணக்கத்தை, மதச்சார்பின்மையை பேச வேண்டும். மதச்சார்பின்மைக்கான போராட்டம் என்பது மனித மனங் களை வென்றெடுக்க வேண்டிய போராட்டம். மத நம்பிக்கை யாளர்களை புண்படுத்தும் வகை யில் நடக்க கூடாது. மதச்சார் பற்ற சக்திகள் இணைந்து மக்கள் ஒற்றுமைக்காக, மதச்சா ர்பின்மைக்காக, மத நல்லிணக்கத்திற்காக போராடு வோம். பாசிச தன்மை கொண்ட இந்து த்துவாவை வெல்ல மார்க்சிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
என்.ராம்
மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பேசுகையில், இந்துத்வா என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இந்துத்வா ஏதேச்சதிகார ஆட்சியை எதிர்க்கமுடியாது. இந்துத்வா என்றால் வெறும் அரசியல் மட்டு மல்ல ஒரு திட்டத்தையே அவர்கள் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த திட்டத்தின் குறிக்கோள் என்ன வென்றால் நாட்டில் இந்துத்துவா தத்துவத்தின் அடிப்படையில் இந்து அரசு ஒன்றை அமைப்பதுதான். இது சாத்தியமா இல்லையா என்பது வேறு விஷயம் என்றாலும் அதற்கான அனைத்து தயாரிப்புகளிலும் பாஜ கவும் அதன் பரிவாரங்களும் ஈடுபட்டு ள்ளன. பல அம்சங்கள் இதில் உள்ளன. சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமிய மக்களை எதிரியாக சித்தரித்து அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க வாய்ப்புண்டு. ஆதிவாசியை சேர்ந்த ஒருவர் குடியரசுத்தலைவர் ஆகியிருக்கிறார். இருந்தாலும் ஆதிவாசி மக்க ளையும் இந்துத்வா விடாது. அவர்க ளும் தாக்குதலுக்கு ஆளாக்கப்படு வார்கள்.
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எந்த ஒரு மதத்தையும் பின்பற்றக் கூடிய உரிமை, சுதந்திரமாக வாழ்வ தற்கான உரிமை, தொழில் செய்யும் உரிமை ஆகியவற்றுக்கு நமது அரசியல சாசனத்தில் உறுதி யளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆட்சியில் இவை அனைத்தும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளது. எங்கெல்லாம் மக்கள் தைரியமாக மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கிறார்களோ அந்த இடங்களில் இவை தாக்கப்படு கின்றன. இவர்களின் தாக்குதலில் இருந்து பத்திரிகையாளர்களும் தப்ப வில்லை. ஆல்ட் நியூஸ் நிறுவ னர்கள் முகமது ஜூபைரும், பிரதீக் சின்ஹாவும் பாஜகவின் ஊழல்களையும் கட்டுக்கதை களையும். நச்சு வேலைகளையும் அம்பலப்படுத்தி வந்தனர். அவர் களை உலகம்முழுவதும் கோடிக் கணக்கானோர் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள்மீது மதவெறி யர்கள் கடும்கோபத்தில் இருந்த தால் பொய்யான வழக்குகளை போட்டனர். ஆனால் ஜூபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும் மற்றொரு வழக்கில் சிறையில் தள்ளு கிறார்கள். ஆனால் மிக மோசமாக கருத்தை தெரிவித்த நுபர் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
டீஸ்டா செதால்வாட் குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தேவை யில்லாத கருத்துக்களை தெரிவித்து ள்ளது. இதனால் அடுத்தநாளே அவரை குஜராத்மாநில காவல் துறையினர் கைதுசெய்து சிறை யில் அடைத்துவிட்டனர். அவர் ஜாமீன் மனு போட்டாலும் அதை விசாரிக்க தயாராக இல்லை. பாஜக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. இதுஆபத்தானது. அரசியல் நிர்பந்தம் காரணமாக சட்டத்தின் பெயரால் போலீசை பயன்படுத்தி சட்டத்தை மீறும்போக்கு நடந்து கொண்டி ருக்கிறது. இன்று நீதித்துறை குறிப்பாக உச்சநீதிமன்றம்,உயர்நீதிமன்றம் இன்னும் சுதந்திரமாக செயல்படவேண்டிய தேவை இருக்கி றது. அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது உச்சநீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று அரசியல் சாசனத்தில் இதற்காக பிரிவு 32ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதால் இதை அரசியல்சாசனத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் கவனமாக இந்த பிரிவை சேர்த்தார் என்றார் ராம்.
இனிகோ இருதயராஜ்
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ் பேசுகையில்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. நாடளுமன்றத்தில் எந்த விவாதமும் கிடையாது. யாரும் எதைப்பற்றியும் பேசமுடியாத நிலை. அப்படியே பேச அனுமதித்தாலும் பேசக்கூடாதா வார்த்தைகள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை தூக்கியெறிய வேண்டும் என்றால் கொள்கைகளால், கோட்பாடுகளால் பிரிந்து கிடக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றார். தேசத்தை ஜனநாயகத்தை பாதுகாக்க, பன்முகத் தன்மையை காப்பாற்ற, அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமை தேவை. அப்போதுதான் நாடு பாசிச சக்திகளிடம் இருந்து தப்பிக்கும். நாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாசிச சக்திகளை இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.