சென்னை, நவ. 26- விவசாயிகளின் விரோதி மோடி ஆட்சியை தூக்கி எறிவோம் என சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். தில்லி விவசாயிகள் போராட்டத்தின் இரண் டாம் ஆண்டு நிறைவையொட்டி ஒன்றிய மோடி அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் சனிக்கிழமை (நவ. 26) மாநில ஆளுநர்கள் மூலம் இந்திய குடியரசு தலைவ ருக்கு மனு அளிக்கும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, சென்னையில் ஆளு நர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ் ணன் தலைமை தாங்கினார். எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்திலிருந்து தொடங்கிய ஊர் வலத்தை அந்த சாலையின் இறுதிப் பகுதியில் (ராணி மெய்யம்மை ஹால் அருகே) காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசுகை யில், “1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நாட்டின் புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்ட நாள். அதேபோல் 2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி விவசாயிகளின் வர லாற்று சிறப்புமிக்க தில்லி போராட்டம் தொடங் கிய நாள். விவசாயிகளை ஏமாற்றிய மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் லட்சக்கணக் கான விவசாயிகள் திரண்டு அந்தந்த மாநில ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்”என்றார். வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர் வால் எழுத்துப்பூர்வமாக ஐக்கிய விவசாய முன் னணிக்கு உறுதிமொழி அளித்தார். இதை யடுத்துதான் அந்த போராட்டம் நிறைவு பெற் றது. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் மோடியும் நிறை வேற்றவில்லை. இவ்வளவு ஒரு மோசமான பிர தமரை நாடு இதுவரை கண்டதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நியாயமான விலை
விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப் பட வேண்டும் என்றால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும். அதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும். கொள்முதலுக்கான உத்தரவாதம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சட்டத்தை இயற்ற ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இல்லை யென்றால் விவசாயிகளின் தற்கொலையை யாரா லும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
கடன் தொல்லை
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளில் 30 விழுக்காட்டினருக்குத் தான் கடன் வழங்கப் பட்டுள்ளது. கடனில் இருந்து ஒரு முழுமை யான விடுதலை அளிக்கும் வகையில், கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளின் கடனை யும் ஒருமுறை அரசு தள்ளுபடி செய்ய வேண் டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திமுக பங்கேற்க வேண்டும்
ஐக்கிய விவசாயி முன்னணி தலைவர் களோடு கலந்து பேசாமல் மக்களவையில் மின் சார சட்டமசோதாவை தாக்கல் செய்ய மாட் டோம் என வேளாண் துறை செயலாளர் கூறி னார். ஆனால் கொடுத்த உறுதி மொழிக்கு மாறாக மக்களவையில் மசோதா தாக்கல் செய்தனர். நடப்பு தொடரில் சட்டமாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக அரசு மேற் கொண்டு வருகிறது. இந்த சட்டம் விவசாயி களுக்கு மட்டும் எதிரானது அல்ல, மின்சாரத்தை பயன் படுத்தும் அனைவருக்கும் எதிரானது. மின்சாரத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மின்சார மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கடிதம் மூலம் வலியுறுத்தினால் மட்டும் போதாது. இந்த மின்சார மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் திமுக வும் பங்கேற்க வேண்டும் எனவும் சண்முகம் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் (சிபிஐ) பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, காளியப்பன் (மக்கள் அதி காரம்), பொன்னையா உள்ளிட்டோரும் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநிலச் செய லாளர்கள் பி.டில்லிபாபு, கே.நேரு, துரைராஜ், மதுசூதனன், ஏ.வி.ஸ்டாலின் மணி, துளசி நாரா யணன், சரவணன், விவசாயிகள் முன்னணி மாநி லக் குழு உறுப்பினர் மேரி லில்லிபாய் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.