சென்னை, அக்.31- ஒன்றிய ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படைப்ப தன் மூலமே, மாநிலங்களையும் இந்தி யாவையும் காக்க முடியும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா பாட்காஸ்ட்’ தொடரின் மூன்றாவது ஆடியோவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு முதல்வர் பேசியிருப்பதாவது:- “மாற்றுக்கட்சி ஆட்சிகளைப் பழி வாங்கமாட்டேன் என்று சொன்னார் பிரதமர் மோடி. ஆனால் பா.ஜ.க. என்ன செய்கிறது? எங்கு எல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியவில்லையோ, அங்கு இருக்கும் கட்சிகளை இரண் டாக, மூன்றாக உடைத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்கள். முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார். கூட்டாட்சிக் கருத்தியலை ஆதரிப்பவன் நான். தில்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றுவேன் என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நடக் கிறது என்றால், மாநில அரசின் திட்டங் களை நிறைவேற்றக்கூட, ஒன்றிய அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிரு க்கிறார்கள். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மா னத்தைத் தமிழ்நாட்டில் அப்போது இருந்த இரண்டு அவைகளிலும் நிறைவேற்றினார் கலைஞர். இவ்வாறு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தைத்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, “இவை முக்கியமான பிரச்சனைகள். இவை பற்றி நாங்கள் அனைத்து முத லமைச்சர்களுடனும் கலந்தாலோ சிக்க உள்ளோம்” என்று சொன்னார். தலைவர் கலைஞர் தி.மு.க.வின் கொள்கைகளை ஐம்பெரும் முழக்கங்களாகச் சொன்னார். அதில் ஐந்தாவது முழக்கம், “மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!”
ஷேக்அப்துல்லாவும்-ஜோதிபாசுவும்
இந்தக் குரலைத் தெற்கில் மட்டு மல்ல, வடக்கில் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லா, கிழக்கில் வங்க த்தில் பொதுவுடைமைத் தோழர், ஜோதி பாசு ஆகியோரும் எதிரொலித்தார்கள்.
அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்தவில்லை
இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது!. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை! மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்ப ளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இப்படி இவர்களை வைத்துக் கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும். மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநி லங்களைக் காப்போம்! இந்தியா வைக் காப்போம்! இந்தியா கூட்ட ணியை வெற்றி பெற வைப்போம்!” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.