பாரிஸ், ஜூன் 8- மருத்துவத் துறையில் உள்ள ஆட் பற்றாக்குறையை உடனடியாகச் சரிசெய்யுமாறு அரசை வலியுறுத்தி பிரான்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள். மருத்துவமனையில் இருக்க வேண்டிய ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று நீண்ட நாட்களாகவே அத்துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரி வந்தன. ஆட்பற்றாக்குறையை அரசு அங்கீ கரித்தாலும், காலிப் பணியிடங்களை நிரப்பாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. சுமார் 50 நகரங்களில் வேலை நிறுத்தப் பேரணிகள் பெரும் அளவில் நடந்துள்ளன. “அவசரம்... ஆட்களை எடு.. ஊதி யத்தை உயர்த்து..” என்ற முழக்கத்து டன் தலைநகர் பாரிசில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.