நீலகிரி, ஏப்.20- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா இன்று (வியாழன்) காலை ஆஜராக வேண்டும் என்று நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், கொநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொ டர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரி ழந்தார். திமுக ஆட்சியில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவைசரக டிஐஜி முத்துசாமி ஆகியோ ரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா ஏப்ரல் 21 வியாழனன்று காலை ஆஜராக வேண்டும் என நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.இதன்படி,வழக்கு தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் தனிப்படை போலீசார் சென்னை வந்து விசாரணை நடத்த உள்ளனர்.