states

காலனித்துவ காலத்தின் மிச்சமிருக்கும் பதவி அல்ல!

திருவனந்தபுரம், அக்.17- அமைச்சர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் ஜனநாயக அமைப்பில் மக்களுக்குப் பதி லளிக்க வேண்டியவர்கள் என்றும்  காலனித்துவ காலத்தின் மிச்ச  மிருக்கும் பதவி அல்ல என்பதை ஆளுநர்  மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் என எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை விமர்சித்தால் அமைச்சர் பதவியை ரத்து செய்வேன்  என ஆளுநர் மிரட்டுவது இந்திய அரசியல் சாசனம், நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிய அறியாமையாகும் என தெரி வித்துள்ளார். அமைச்சர்களை வாபஸ் பெற ஆளு நருக்கு அதிகாரம் இல்லை. முதலமைச்ச ரின் ஆலோசனையின்பேரில்தான் அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் முடியும். சமூக ஊடகங்களில் ஆளுநரின் பிஆர்ஓ வெளியிட்ட குறிப்பின் மூலம் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கே கேரள ராஜ்பவன் சவால் விடுத்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்ததும் கேரள ஆளுநருக்கு நினை வில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவரது சமீபத்திய தலையீடு மக்கள், ஜனநாயக அமைப்பு மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் மீதான தாக்குதலாக மட்டுமே பார்க்க முடியும். அரசியல் சட்டத்தின் இதயத்தை ஆளு நர் துளைத்துள்ளார். ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற முயற்சிகளை அவர் கைவிடவேண்டும். அரசமைப்புச் சட்டத்தின்  163 மற்றும் 164 ஆவது பிரிவுகளையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் படித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். பேரவை யில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கையொப்பமிடாமல், பல்கலைக் கழகங் களில் தேவையற்ற அத்துமீறல்களை நடத்துவதுதான் அரசியல் சட்டத்தின் மாண்பா என்பதை ஆளுநரே தெளிவு படுத்த வேண்டும். அமைச்சர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் ஜனநாயக அமைப்பில் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றும் காலனித்துவ காலத்தின் மிச்சமிருக்கும் பதவி அல்ல என்பதை அவர் மீண்டும் நினை வில் கொள்ள வேண்டும். வெளியிடப்பட்ட ட்வீட்டை திரும்பப் பெறவும் அவசர நட வடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வ தாக எம்.வி.கோவிந்தன் அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.