states

தீக்கதிர் விரைவு செய்திகள்

குண்டு வீசியது ஏன்?  கருக்கா வினோத் வாக்குமூலம்

சென்னை, நவ.1- சென்னை தேனாம்பே ட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத்,  அக்.25 அன்று  ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப் பட்ட அவரை போலீஸ் காவ லில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி யது. இதையடுத்து, போலீ சார் நடத்திய விசாரணை யில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடு தலை செய்ய வேண்டும் என்பதற்காகவே, ஆளுநர்  மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கருக்கா வினோத் வாக்கு மூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சங் பரிவாரின் ஜனம் தொலைக்காட்சி மீது  கேரள  காவல்துறை வழக்கு

கொச்சி, நவ. 1- களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பயன்படுத்தி வெறுப்புணர்வை பரப்பிய சங்பரி வார் சேனலான ‘ஜனம் டிவி’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூத் லீக் பொதுச் செயலாளர் பி.கே. பெரோஸ் புகாரின் பேரில் எர்ணாகுளம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி மூலம் பரபரப்பு செய்திகளை வெளியிட்ட தாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.  இதுபோல் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்புணர்வை பரப்பிய தாக ஜனம் தொலைக்காட்சி செய்தி யாளர் அனில் நம்பியார் மீதும் காவல்துறையினர்  புதனன்று வழக்குப் பதிவு செய்தனர்.

எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும்
‘அன்பான ஆறுதல்’ திட்டத்திற்கு ரூ.16.05 கோடி:
அமைச்சர் ஆர்.பிந்து தகவல்

காசர்கோடு, நவ. 1- காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டோருக்கான ‘சிநேக சாந்த்வனம்’ (அன்பான ஆறு தல்) திட்டத்திற்கு ரூ.16.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர்.ஆர்.பிந்து தெரிவித்துள்ளார். கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரித்தோட்டங் களுக்கு எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டு வந்தது. 2002க்கு முன்பு வரை கால் நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த நச்சு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்தது. கருவில் இருந்த குழந்தைகள்கூட இதில் தப்பவில்லை. பாதி்ப்பு தொடர் கிறது. அவர்களுக்கான மறுவாழ்வுக் காக ‘சினேக சாந்த்வனம்’என்னும் திட்டத்தை எல்டிஎப் அரசு 7 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கி செயல் படுத்தி வருகிறது. இந்நிலையிலேயே, 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ‘சிநேக சாந்த்வனம்’ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில், ரூ.16.05  கோடியை விடுவிக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கேரள சமூகப் பாதுகாப்பு இயக்கத்தின் ‘சினேக சாந்த்வனம்’என்ற தலைப்பில் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

தீபாவளிக்கு  2 மணி நேரம்  மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

சென்னை, நவ.1- வருகிற 12 ஆம் தேதி தமிழ்நாடு  முழுவதும் தீபாவளி கொண்டாடப்படு கிறது. அன்றைய தினம் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம்  மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி  அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தர விட்டது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7  மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு  வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.  கடந்த ஆண்டும் இரண்டு மணி நேரம்  தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

சென்னை, நவ.1- வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ  எடை கொண்ட சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.101.50 புதன் கிழமை (நவ.1) உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,898-க்கு விற்பனை  செய்யப்பட்டு வந்த வணிக பயன் பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வரு கின்றன. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான புதனன்று (நவ.1) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி ரூ.101.50 உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் 19 கிலோ  எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை ரூ.1,999.50-ஆக விற்பனை செய்யப் படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை  மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையா கிறது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களில் ரூ.300-க்கு மேல் சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டுள்ளதால், உணவகங்களின் விலை உயர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முருகன் கோயில்களுக்கான சுற்றுலா முன்பதிவு தொடக்கம்

சென்னை, நவ.1- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முருகன் கோயில் களுக்கான சுற்றுலா முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தி லிருந்து காலை 7 மணிக்கு புறப்படும்  பேருந்து மாலை வந்தடையும். சுற்றுலா வில் வல்லக்கோட்டை, குன்றத்தூர், திருப்போரூர், திருவான்மியூர் முருகன் கோயில்களில் தரிசனம் செய்யப்படும். மேலும் விவரங்களை 180042531111, 044-25333333, 044-25333444 (or) www.ttdconline.com தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.