விழுப்புரம்,ஆக.30- தமிழ்நாட்டில் சாதி மறுப்பு காதலர்களை ஏற்கும் பெற்றோர் இருந்தால் ஆணவ படுகொலை என்பது அகராதியில் இருக்காது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன் மகன் ஆனந்த்-தீபலட்சுமி ஆகியோர் சாதி, சடங்கு மறுப்பு திருமணம் புதனன்று (ஆக.30) திண்டிவனத்தில் நடை பெற்றது. இந்த திருமணத்திற்கு தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்திப் பேசிய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் என்.சுப்பிரமணியனுக்கும், அம்சாவுக் கும் அவரது சொந்த ஊரில் அன்றைக்கு ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவ ட்டத்தின் செயலாளர் என்ற முறையில் தமது தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்.ராமமூர்த்தி, ஏ.கோதண்டம் ஆகி யோர் முன்னிலையில் திருமணம் நடை பெற்றதை நினைவுகூர்ந்தார். இன்றைக்கு, சுப்பிரமணியன் மகனுக் கும் தமது தலைமையில் சடங்கு, சம்பிர தாயங்கள் இல்லாமல் சீர்திருத்த முறை யில் திருமணத்தை நடத்தி வைத்த தையும் குறிப்பிட்டார்.
ஒரு ஆணும் ஒரு இளம் பெண்ணும் சமூகத்தில் காதலித்து விட்டால், சமூக விரோத செயலில் ஈடு பட்டது போன்று குடும்பத்தில் இருப் பவர்கள் பேசும் நிலை உள்ளது. ஆனால், சுப்பிரமணியன் இல்லத் திரு மணம் அப்படிப்பட்டது அல்ல. இந்த காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோல அனைத்து பெற்றோரும் இருந்தால் பிரச்சனைகள் இருக்காது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் என்பது அகரா தியில் இருக்காது என்றும் பால கிருஷ்ணன் தெரிவித்தார். சீர்திருத்தத் திருமணங்கள் வழக்கறிஞர்களுக்கு முன்னால் நடந்தால் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. ஆனால் எப்படி திருமணம் செய்து கொண்டாலும் அது திருமணம்தான். அது சட்டப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.