பியூனஸ் அயர்ஸ், ஜூன் 25- ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் ஜி-7 மாநாட்டில் அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி அல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தத் தகவலை ஜனாதிபதி அலுவல கத்தின் செய்தித் தொடர்பாளர் காப்ரியலா செர்ருட்டி தெரிவித்தார். விருந்தினராகக் கலந்து கொள்ளும்படி அர்ஜெண்டினா வுக்கு ஜி-7 அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்டு, ஜனாதிபதியே அதில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வலுவான நாடு கள் என்று அழைக்கப்படும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், கனடா, அமெ ரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகியவை அடங்கிய ஜி-7 அமைப்பின் மாநாட்டில் முதன் முறையாக அர்ஜெண்டினா பங்கேற்கப் போகிறது. ஜூன் 26 முதல் 28 வரை மாநாடு நடைபெறுகிறது. தென் அமெரிக்காவின் குரலை அந்த மாநாட்டில் அல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் எதிரொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.