சென்னை, ஜூலை 5- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஜூலை 10 அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இந்த அறிவிப்பை வெளியிட்டிருக் கிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூலை 10 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஜூலை 8 அன்று மாலை 6 மணிக்குப் பிறகு, வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக் கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்க, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. மேலும், விக்கிரவாண்டி தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஜூலை 8 அன்று மாலை 6 மணிக்கு மேல் வெளி யேற வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் விவகாரத்தை, திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ் ஆப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடி விலான தகவல் தொடர்பையும் இது உள்ள டக்கும் என்றும் சாகு குறிப்பிட்டுள்ளார்.