states

நீதிமன்றத் தடை மீறப்பட்டிருந்தால் அதை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்!

புதுதில்லி, ஏப்.21- உச்ச நீதிமன்றம் தடைவிதித்த பின்னரும், ஜஹாங்கீர் புரியில் இஸ்லாமியர் குடியிருப்புகள், கடை கள் இடிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒற்றையாளாகப் போராடி புல்டோசர்களை தடுத்து நிறுத்திய வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் பிருந்தா காரத்.  இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை தில்லி மாநகராட்சி மீறியது குறித்து பிருந்தாகாரத் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வியா ழனன்று விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. பிருந்தா காரத் சார்பில் வழக்கறிஞர் சுரேந்திர நாத் ஆஜரானார்.  அவர் வாதிடுகையில், “உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்  பித்த பின்னரும், அங்கு இடிபாடு கள் தொடர்ந்து நடந்தது. 10.45-க்கு உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தது. ஆனால், 12.25 வரை அங்கு இடி பாடுகள் நீடித்தது. பிருந்தா காரத் மட்டும் உள்ளே சென்று தடுக்க வில்லை என்றால் மொத்த ‘சி-  பிளாக்’கும் இடிக்கப்பட்டு இருக் கும்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவு எப்போது மேயரிடம் கொடுக்கப்பட்டது என்று நீதிபதி கள் கேட்டனர். அதற்கு வழக்கறி ஞர் சுரேந்திர நாத், “11 மணிக்கே இந்த விஷயம் மேயருக்கு தெரியும். அவர் ஊடகங்களில் அளித்த பேட்டி யில் நீதிமன்ற உத்தரவை மதிப் பேன் என்றார். ஆனால், நீதிமன்ற உத்தரவு தெரிந்தும் கூட அவர் தொடர்ந்து அங்கு ஒன்றரை மணி நேரம் கட்டடங்களை இடித்துள் ளார்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து கோபம் அடைந்த நீதிபதிகள்.. “நாங்கள் உத்தரவு பிறப்பித்த பின்பும் செய்யப்பட்ட இடிப்பாடுகள் குறித்த விஷயங்க ளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதைப் பற்றி விசாரிப்போம்” என்று குறிப்  பிட்டனர்.  அத்துடன் அரசுத் தரப்பு வழக்க றிஞரைப் பார்த்து, “அங்கு இருக் கும் கட்டடங்களை இடிக்க ஏன் இத்தனை புல்டோசர்கள்?” என்றும் கேள்வி எழுப்பினர்.  பின்னர், “கட்டடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? என்று அரசுத் தரப்பும், மனுதாரர் தரப்பும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறி வழக்கு விசா ரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.